சினிமா

பாகுபலி படக்குழுவினரை வியக்க வைத்த டப்ஸ்மாஷ் இளைஞர்கள்

Published On 2018-07-15 13:14 IST   |   Update On 2018-07-15 13:14:00 IST
டப்ஸ்மாஷ் இளைஞர்கள் வெளியிட்ட வீடியோவை பார்த்த பாகுபலி படக்குழுவினர்கள் வியந்து படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். #Baahubali
ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு படங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலில் அதிக சாதனை படைத்தது. 

இதன் முதல் பாகத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ், பாகுபலியாக இருக்கும் பிரபாஸை கொல்வார். அவர் எதற்கு கொல்வார் என்று 2ம் பாகத்தில் காண்பித்திருப்பார்கள். இதற்கிடையில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்று பெரிய விவாதமே நடந்தது.



இந்நிலையில், பாகுபலியை கட்டப்பா கொல்லும் காட்சியை டப்ஸ்மாஷில் இளைஞர்கள் படமாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். இதைப் பார்த்த பாகுபலி படக்குழுவினர்கள் ‘ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க சூப்பர்’ என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 
Tags:    

Similar News