சினிமா

அதிகமான கவர்ச்சி எனக்குப் பொருந்தாது - அதிதி ராவ்

Published On 2018-06-21 09:57 GMT   |   Update On 2018-06-21 09:57 GMT
‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதிதி ராவ் ஹிடாரி, அளவுக்கு அதிகமான கவர்ச்சி எனக்குப் பொருந்தாது என்று கூறியுருக்கிறார். #AditiRaoHydari
‘காற்று வெளியிடை’ படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் சமீபகாலமாக படு கவர்ச்சியான படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என்னுடைய ஆடைகளை நான்தான் தேர்வு செய்வேன். அளவுக்கு அதிகமான கவர்ச்சி எனக்குப் பொருந்தாது. அணியும் ஆடைகளை வைத்து மதிப்பிடும் பழக்கம் இன்னும் நம்மிடம் இருக்கிறது.

என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். இந்த ஆண்டு தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி இருக்கிறேன். தமிழிலும், இந்தியிலும் இரண்டு படங்கள் நடித்து வருகிறேன். எனக்கு ஒரே நேரத்தில் நிறைய படங்கள் நடிக்கும் வழக்கம் இல்லை.



சினிமாவில் என்னுடைய பயணம் நிதானமாக தான் இருக்கும். இன்னும் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது. அதற்காக மார்க்கெட்டையே இழந்துட்டேன் என்றும், வாய்ப்புக்காக கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார். #AditiRaoHydari
Tags:    

Similar News