சினிமா (Cinema)

மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு

Published On 2018-05-18 02:48 GMT   |   Update On 2018-05-18 02:48 GMT
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக பல வருடங்களாக இருக்கும் காஜல் அகர்வால், தனது மார்க்கெட்டை தக்க வைக்க புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். #KajalAgarwal
காஜல் அகர்வாலுக்கு கடந்த வருடம் தமிழ், தெலுங்கில் 4 படங்கள் வந்தன. அவற்றில் இரண்டு படங்கள் விஜய், அஜித்குமாருடன் நடித்தவை.

சீனியர் நடிகர்களுடன் இதுவரை ஜோடி சேர்ந்த காஜல் அகர்வால் இப்போது இளம் கதாநாயகர்களை தேடுகிறார். இது மார்க்கெட்டை தக்க வைக்கும் தந்திரமாம். இதுகுறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:–

‘‘நான் அழகாக இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அதற்கு ஏற்றமாதிரி இருக்க ஒவ்வொரு நாளும் உழைக்கிறேன். 15 வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் அமைகின்றன. அதிர்ஷ்டம் இல்லாமல் இதெல்லாம் நடக்காது. என் திறமையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளிப்படுத்துகிறேன்.

தமிழ், தெலுங்கு மொழிகளில்தான் அதிக படங்கள் வருகின்றன. இந்த இரு மொழி ரசிகர்களுமே என்னை வட இந்திய நடிகையாக பார்க்காமல் தங்கள் சொந்த மாநிலத்து பெண் போல நேசிக்கின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படத்தில் நடிக்கிறேன். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற குயின் படத்தின் தமிழ் பதிப்பாக இது தயாராகிறது. 



சர்வானந்த் ஜோடியாக தெலுங்கு படமொன்றில் நடிக்கிறேன். இளம் கதாநாயகன் சர்வானந்த். இப்போதுதான் வளர்ந்து வருகிறார். அவரோடு ஜோடி சேர்வது உங்கள் தகுதிக்கு சரியானதா? என்று பலரும் கேட்கின்றனர். காலத்துக்கு ஏற்ப மாறினால்தான் நிலைத்து இருக்க முடியும். இப்போதைய கதாநாயகிகள் திறமையை காட்ட புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். நானும் அப்படித்தான். கதை பிடித்து இருந்தால் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர தயாராக இருக்கிறேன்.’’

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
Tags:    

Similar News