கார்
null

தேதி குறிச்சி வச்சிக்கோங்க - வாடிக்கையாளர்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்த மாருதி சுசுகி

Published On 2025-04-04 12:11 IST   |   Update On 2025-04-04 12:12:00 IST
  • மாடல்களை பொறுத்து, ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.62 ஆயிரம்வரை உயருகிறது.
  • பல நிறுவனங்களும் இந்த மாதம் தங்கள் கார்களின் விலையை மாற்ற உள்ளன.

மாருதி சுசுகி நிறுவனத்தின் பல்வேறு மாடல் கார்களின் விலை வருகிற 8-ந்தேதி முதல் உயருகிறது. மாடல்களை பொறுத்து, ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.62 ஆயிரம்வரை உயருகிறது.

மூலப்பொருட்கள் விலை உயர்வு, நிறுவன செலவுகள் ஆகியவையே விலை உயர்வுக்கு காரணம் என்று மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிராண்ட் விட்டாராரூ. 62,000 வரை விலை உயரும். அதைத் தொடர்ந்து ஈகோ ரூ. 22,500, வேகன் ஆர், எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் ஃபிராங்க்ஸ் ஆகியவை முறையே ரூ. 14,000, ரூ. 12,500, ரூ. 12,500 மற்றும் ரூ. 2,500 வரை விலை உயர்வு பெறும். மாருதியை தவிர, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, கியா, நிசான் மற்றும் ரெனால்ட் போன்ற நிறுவனங்களும் இந்த மாதம் தங்கள் கார்களின் விலையை மாற்ற உள்ளன.

Tags:    

Similar News