கார்
மாருதி சுசுகி கார்

கார் மாடல்கள் விலையை உயர்த்திய மாருதி சுசுகி

Published On 2022-01-16 05:45 GMT   |   Update On 2022-01-15 11:36 GMT
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தியது. இதன் விவரங்களை பார்ப்போம்.


2022 ஆண்டில் கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக மாருதி சுசுகி அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது கார் மாடல்கள் விலை 1.7 சதவீதம் உயர்த்துகிறது. விலை உயர்வு நேற்று (ஜனவரி 15, 2022) அமலுக்கு வந்தது. 

இந்திய சந்தையில் மாருதி சுசுகி தற்போது 14 மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர வரும் மாதங்களில் மேலும் சில புது மாடல்களை அறிமுகம் செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது. அதன்படி முதலில் செலரியோ சி.என்.ஜி. மாடலும் அடுத்த மாதம் பலேனோ ஃபேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. 



முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 1.9 சதவீதம் உயர்த்தியது. கடந்த ஆறு மாதங்களில் மாருதி சுசுகி தனது கார் மாடல்களின் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News