கார்
டாடா டியாகோ

விரைவில் இந்தியா வரும் டாடா சி.என்.ஜி. கார்

Published On 2022-01-07 07:27 GMT   |   Update On 2022-01-07 07:27 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மற்றும் டிகோர் சி.என்.ஜி. மாடல்களின் வெளியீட்டு விவரங்களை அறிவித்து இருக்கிறது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் டியாகோ மற்றும் டிகோர் சி.என்.ஜி. மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இரு மாடல்களும் இந்தியாவில் ஜனவரி 19 ஆம் தேதி அறிமுகமாகும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது.

அறிமுக தேதி மட்டுமின்றி டியாகோ மற்றும் டிகோர் சி.என்.ஜி. மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ஒவ்வொரு பகுதி மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. தோற்றத்தில் புதிய சி.என்.ஜி. மாடல்களும் முந்தைய பெட்ரோல் வேரியண்ட் போன்றே காட்சியளிக்கும்.



புதிய டாடா டியாகோ சி.என்.ஜி. மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சி.என்.ஜி. கிட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் செயல்திறன் பெட்ரோல் யூனிட்டை விட குறைவாகவே இருக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.

Tags:    

Similar News