கார்
வோக்ஸ்வேகன்

கார் மாடல்கள் விலையை உயர்த்தும் வோக்ஸ்வேகன்

Published On 2021-12-25 09:06 GMT   |   Update On 2021-12-25 09:06 GMT
வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.


வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலை ஜனவரி 1, 2022 முதல் உயர்த்தப்படுவதாக அறிவித்து உள்ளது. விலை உயர்வு காரணமாக கார்களின் விலை தற்போதைய விலையில் இருந்து இரண்டு முதல் ஐந்து சதவீதம் வரை அதிகமாகிறது. விலை உயர்வு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

விலை உயர்வில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் மட்டும் இடம்பெறாது. சமீபத்தில் தான் டைகுன் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலின் விலை உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக இந்த மாடலின் விலை அடுத்த மாதம் உயர்த்தப்படாது என தெரிகிறது. இந்த ஆண்டு வோக்ஸ்வேகன் நிறுவனம் டி ராக், டைகுன் மற்றும் டிகுவான் பேஸ்லிப்ட் போன்ற மாடல்களை அறிமுகம் செய்தது.



விரைவில் வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய செடான் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் விர்டுஸ் என அழைக்கப்பட இருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News