ஆட்டோமொபைல்
பஜாஜ் - டிரையம்ப் முதல் குரூயிசர் மாடல் வெளியீட்டில் திடீர் மாற்றம்
பஜாஜ் மற்றும் டிரையம்ப் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் முதல் குரூயிசர் மாடல் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
பஜாஜ் மற்றும் டிரையம்ப் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் முதல் மோட்டார்சைக்கிள் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவலை பஜாஜ் ஆட்டோ நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜிவ் பஜாஜ் தெரிவித்து இருக்கிறார்.
தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இந்த திட்டம் சில மாதங்கள் தாமதமாக துவங்கி இருப்பதாக அவர் மேலும் தெவிரித்தார். முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் 2022 ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், தற்சமயம் இந்த மாடல் 2023 ஆண்டு அறிமுகமாகும் என அவர் தெரிவித்தார்.
இரு நிறுவனங்கள் இந்த மோட்டார்சைக்கிள் பணிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 99 சதவீதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுகிறது. இதன் விற்பனை மற்றும் விளம்பர பணிகளை பஜாஜ் மேற்கொள்ள இருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிள் ராயல் என்பீல்டு நிறுவன மாடல்கள் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா சிபி350 மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.