ஆட்டோமொபைல்
ஹீரோ மோட்டோகார்ப்

ஜனவரி முதல் புதிய விலை - ஹீரோ மோட்டோகார்ப் அறிவிப்பு

Published On 2020-12-18 09:48 GMT   |   Update On 2020-12-18 09:48 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்களுக்கு ஜனவரி முதல் புதிய விலை நிர்ணயம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜனவரி 2021 முதல் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி ஹீரோ நிறுவன மாடல்கள் விலை ரூ. 1500 வரை உயர்த்தப்பட இருக்கிறது.

உதிரிபாகங்கள் மற்றும் இதர கட்டணங்களுக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பதால் விலை உயர்வு அறிவிக்கப்பட இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு மூலம் விலை உயர்வை அறிவிக்கும் முதல் இருசக்கர வாகன உற்பத்தியாளராக ஹீரோ மோட்டோகார்ப் இருக்கிறது.

விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப வேறுபடும். மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் புதிய விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு ஜனவரி 1, 2020 முதல் அமலுக்கு வருகிறது.

Tags:    

Similar News