ஆட்டோமொபைல்
ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்

ஒரு காலாண்டிற்கு ஒன்று - ராயல் என்பீல்டு அதிரடி திட்டம்

Published On 2020-11-17 08:25 GMT   |   Update On 2020-11-17 08:25 GMT
ராயல் என்பீல்டு நிறுவனம் ஒரு காலாண்டிற்கு ஒன்று எனும் வீதத்தில் திட்டத்தை தீட்டி உள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம் அதிக எண்ணிக்கையில் புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வரிசையில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த தகவலை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினோத் தசாரி உறுதிப்படுத்தி இருக்கிறார். அடுத்த ஏழு ஆண்டுகளில் 28 மாடல்களை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டு இருக்கிறது. அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தேவையான உற்பத்தி திறன் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.



இவை நிற வேரியண்ட்கள் இன்றி அனைத்தும் புதிய மாடல்கள் ஆகும். இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனம் 250சிசி - 750சிசி பிரிவில் கவனம் செலுத்த இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் தொழில்நுட்பங்களை உருவாக்குவது, எலெக்ட்ரிக் மாடல்களை உற்பத்தி செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டு உள்ளது.

இதுதவிர பெரும்பாலான நிதி சர்வதேச சந்தை விரிவாக்க பணிகளுக்கும் செலவிடப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வெளியான முதல் மாடலாக Meteor 350 சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அடுத்த தலைமுறை கிளாசிக் 350 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.

Tags:    

Similar News