ஆட்டோமொபைல்
டொயோட்டா

வங்கியுடன் இணைந்து அசத்தல் சலுகை அறிவித்த டொயோட்டா

Published On 2021-11-22 09:16 GMT   |   Update On 2021-11-22 09:16 GMT
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அசத்தல் நிதி சலுகைகளை வழங்க வங்கியுடன் கூட்டணி அமைத்துள்ளது.


டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி டொயோட்டா வாடிக்கையாளர்களுக்கு இண்டஸ்இண்ட் வங்கி சார்பில் அசத்தலான நிதி சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

இண்டஸ்இண்ட் வங்கி டொயோட்டா கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையின் பேரில் மிக குறைந்த வட்டி வழங்குகிறது. இந்த சலுகை தனியார் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கார்களுக்கும் பொருந்தும். இண்டஸ்இண்ட் டொயோட்டா விற்பனையாளர்களுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நிதி சலுகைகளை வழங்குகிறது.



"கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்களால் பி பிரிவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிகரித்து வரும் வரவேற்பை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த டொயோட்டா வாகனங்களை நாடு முழுக்க கொண்டு சேர்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்," என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இணை மேலாளர் வைஸ்லைன் சிகாமணி தெரிவித்தார்.
Tags:    

Similar News