ஆட்டோமொபைல்
மெக்லாரென்

அந்த தகவல்களை நம்ப வேண்டாம் - மெக்லாரென் அதிரடி

Published On 2021-11-16 09:14 GMT   |   Update On 2021-11-16 09:14 GMT
ஆடி நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மெக்லாரென் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.


மெக்லாரென் குழுமத்தை ஆடி நிறுவனம் முழுமையாக விலைக்கு வாங்கப் போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. மெக்லாரென் பார்முலா 1 குழுவை முழுமையாக வாங்குவதற்கான பணிகளில் ஆடி ஈடுபட்டு வந்தது. இதன் மூலம் ஆடி நிறுவனம் 2026-இல் நடைபெற இருக்கும் பார்முலா 1 பந்தயத்தில் களமிறங்க இருப்பதாக கூறப்பட்டது.

ஏற்கனவே லம்போர்கினி மற்றும் வோக்ஸ்வேகன் குழுமத்தில் நிர்வகிக்கும் பங்குகளை ஆடி நிறுவனம் கைப்பற்றி வைத்திருக்கிறது. அந்த வகையில், தற்போது பார்முலா 1 உலகில் கால்பதிக்கவும் ஆடி திட்டமிட்டு வருகிறது. பெருந்தொற்று காலக்கட்டத்தில் மெக்லாரென் நிறுவனம் தொடர் இழப்பு காரணமாக 1,200 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. 



"மெக்லாரென் குழுமம் ஆடி நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக வலம்வரும் செய்திகளை அறிவோம். இந்த தகவலில் துளியும் உண்மையில்லை. ஒப்பந்ததாரர்கள், உதிரிபாகங்களை வினியோகம் செய்வோர் மற்றும் கார் உற்பத்தியாளர்களுடன் தொடர்ந்து சந்திப்புகள் மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எனினும், மெக்லாரென் குழுமத்தின் உரிமையாளர் பிரிவில் இதுவரை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை," என மெக்லாரென் தெரிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News