ஆட்டோமொபைல்
2021 முதல் ஜாவா மாடல்கள் விலை உயர்வு
2021 முதல் ஜாவா நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது வாகனங்கள் விலையை ஜனவரி 1, 2021 முதல் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜாவா, ஜாவா பார்டி டு மற்றும் பெராக் என மூன்று மாடல்கள் விலையும் உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
விலை உயர்வு அடுத்த மாதம் முதல் அமலாக இருப்பதாக தெரிகிறது. எனினும், ஒவ்வொரு மாடலுக்கும் எவ்வளவு விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. உதிரிபாகங்கள் மற்றும் இதர செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.
தற்சமயம் ஜாவா நிறுவன மாடல்கள் விலை ரூ. 1.65 லட்சத்தில் துவங்குகிறது. ஜாவா பெராக் மாடல் விலை ரூ. 1.94 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.