ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி

பாதுகாப்பு சோதனையில் இப்படியா? ஷாக் கொடுத்த மாருதி சுசுகி

Published On 2020-11-11 11:14 GMT   |   Update On 2020-11-11 11:14 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல் பாதுகாப்பு சோதனையில் பெற்ற புள்ளிகள் பயனர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.


மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ மாடல் சமீபத்திய குளோபல் NCAP சோதனையில் பூஜ்ஜியம் புள்ளிகளை பெற்று இருக்கிறது. இந்த மாடலில் டிரைவர் சைடு ஏர்பேக் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்த காரில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் ஓட்டுனரின் தலையை மட்டும் பாதுகாக்கிறது. ஒட்டுனரின் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளுக்கு எந்த பாதுகாப்பும் வழங்கவில்லை என குளோபல் NCAP அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



குழந்தைகள் பாதுகாப்பில் எஸ் பிரெஸ்ஸோ இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளது. 3 பாயிண்ட் சீட் பெல்ட் மற்றும் ஐசோபிக்ஸ் ஆங்கரேஜ்கள் இல்லாத காரணத்தால் இத்தனை புள்ளிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த வாகனத்தின் வடிவம் நிலையற்றதாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News