ஆன்மிக களஞ்சியம்

வீரபத்திரர் யார்?

Published On 2023-09-04 12:04 GMT   |   Update On 2023-09-04 12:04 GMT
  • “சிவனின் ஒரு அம்சம்தான் வீரபத்திரர்”
  • வீரபத்திரர், “அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றியவர்”

வீரபத்திரர் யார்?

தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தினமும் ஈசனை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு "வீரபத்திரர்" பற்றி தெரிந்து இருக்கும்.

என்றாலும் பெரும்பாலானவர்கள் வீரபத்திரர் பற்றியும், அவரது அவதார சிறப்புப் பற்றியும் அறிந்து கொள்ளாமலே உள்ளனர்.

"சிவனின் ஒரு அம்சம்தான் வீரபத்திரர்" என்று ஒரே வரியில் வீரபத்திரர் பற்றி சொல்லி விடலாம்.

ஆனால் அந்த அவதார சிறப்பை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சிவனின் 64 வடிவங்களில் ஒரு வடிவான வீரபத்திரர், "அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றியவர்" தவறு செய்தவனுக்கு தண்டனை தந்து நீதியை காக்கும் நீதி தேவனாக அவதரித்தவர்.

Tags:    

Similar News