ஆன்மிக களஞ்சியம்

தொண்டை மண்டலத்தின் வைரக்கிரீடம்-வடபழனி

Published On 2024-04-16 12:02 GMT   |   Update On 2024-04-16 12:02 GMT
  • பல கோடி பிறவிகளில் செய்த புண்ணியங்கள் திரண்டு ஒன்றுபட்டால் தான் முருக பக்தி உண்டாகும்.
  • முருகப் பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு.

முருகப் பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும்,

தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.

முருகப்பெருமானைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டு மானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை,

அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து,

அதை நுணுக்கமாக ஆராய வேண்டும்.

அப்போது தான் முருகன் யார் என்பது மிகத்தெளிவாக தெரியவரும்.

பல கோடி பிறவிகளில் செய்த புண்ணியங்கள் திரண்டு ஒன்றுபட்டால் தான் முருக பக்தி உண்டாகும்.

முருகன் அருள் பெற அறுபடை வீடுகளுடன் தொண்டை மண்டலத்தின் வைரக்கிரீடமாகத் திகழும் வடபழனி தலமும் உள்ளது.

Tags:    

Similar News