ஆன்மிக களஞ்சியம்

திருவாரூர் கோவில்- பசுவிற்கு நீதி வழங்க மகனை இழந்த மனுநீதி சோழன்

Published On 2023-08-31 09:02 GMT   |   Update On 2023-08-31 09:02 GMT
  • நாரதரோ, பூமியில் மனுநீதிச்சோழனே நேர்மையானவன் என்றார்.
  • அந்த வேதனையை தானும் படவேண்டும் என்பதற்காக தன் மகனை தேரில் ஏற்றி கொன்றான் சோழன்.

திருவாரூர் தியாகராஜர் கோவில்- பசுவிற்கு நீதி வழங்க மகனை இழந்த மனுநீதி சோழன் ஓவியம்

தேவலோகத்தில் யார் நேர்மையானவர் என்ற போட்டி ஏற்பட்டது.

எமதர்மராஜன் "நானே நேர்மையாளன்" என்றார்.

நாரதரோ, பூமியில் மனுநீதிச்சோழனே நேர்மையானவன் என்றார்.

இதனால் எமன் பசுவாக வடிவெடுத்து, ஒரு கன்றுடன் திருவாரூர் ராஜவீதிக்கு வந்தார்.

அப்போது மனுநீதி சோழனின் மகன் வீதிவிடங்கன் தேரில் வந்தான்.

வேகமாக வந்த தேரில் சிக்கி, கன்று இறந்தது.

இதையறிந்த பசு மன்னனின் அரண்மனைக்கு சென்று நீதி கேட்டது.

கன்றை இழந்த பசு எவ்வளவு வேதனைப்படுமோ, அதே வேதனையை தானும் படவேண்டும் என்பதற்காக தன் மகனைத் தேர்ச்சக்கரத்தில் ஏற்றி கொன்றான் சோழன்.

பசு வடிவில் இருந்த எமதர்மராஜா மனுநீதிச்சோழனுக்கு காட்சி கொடுத்து "நீயே நேர்மையானவன்" எனக் கூறி மறைந்தார்.

இந்த காட்சியை விளக்கும் கல்தேர் கோவிலின் வடகிழக்கு மூலையில் உள்ளது.

Tags:    

Similar News