ஆன்மிக களஞ்சியம்

தீர்த்தமாடுவதன் பலன்கள்

Published On 2023-10-07 12:15 GMT   |   Update On 2023-10-07 12:15 GMT
  • நதிகளை அவர்கள் வெறும் தண்ணீர் ஓடும் இடமாக பார்க்கவில்லை.
  • தெய்வத்துக்கு இணையாக பார்த்தனர்.

நதிகளுக்கும், நீர்நிலைகளுக்கும் நம் முன்னோர்கள் மிகுந்த மரியாதை கொடுத்தனர்.

நதிகளை அவர்கள் வெறும் தண்ணீர் ஓடும் இடமாக பார்க்கவில்லை.

தெய்வத்துக்கு இணையாக பார்த்தனர்.

நதிகளை மையமாக வைத்தே எல்லா விழாக்களையும் அமைத்தனர்.

''நீரின்றி அமையாது உலகு'' என்பதற்கு ஏற்ப செயல்பட்டனர்.

அதன் ஒரு பகுதியாகத்தான் புண்ணிய நதிகளில் நீராடும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

அமாவாசை, பவுர்ணமி தினங்களில் நதிகள், நீர்நிலைகளில் நீராடுவது மிகுந்த பலன் தரும் என்று நம்பினார்கள்.

அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகம் போன்ற விழாக்களில் தீர்த்தமாடினால் மூன்று பிறவிகளின் பாவம் அகன்று விடும் என்பது ஐதீகம்.

அதனால்தான் குடந்தையில் நீராட குலம் தழைக்கும் என்றனர்.

சிறப்பு வாய்ந்த குடந்தை மகாமகம் குளத்தில் நீராடினால் அந்த பலனை பெற முடியும்.

Tags:    

Similar News