ஆன்மிக களஞ்சியம்

தட்சனையும் அனைத்து தேவர்களையும் நிலை குலைய செய்த வீரபத்திரர்

Published On 2023-09-04 12:16 GMT   |   Update On 2023-09-04 12:16 GMT
  • நாகமாலை அணிந்து வீரபத்திரர் வெளிப்பட்டிருந்தார்.
  • கையில் வெட்டுபட்ட அக்னி தேவன் கிளியாக மாறி பறந்தான்.

வீரபத்திரர் அவதார கதை-தட்சனையும் அனைத்து தேவர்களையும் நிலை குலைய செய்த வீரபத்திரர்

சிவனின் நெற்றிக்கண் தீப்பொறியில் தோன்றிய வீரபத்திரர், சிவபெருமான் போலவே மூன்று கண்கள், அக்னி சடை, 8 கைகள், அந்த கைகளில் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாளம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி,

நாகமாலை அணிந்து வீரபத்திரர் வெளிப்பட்டிருந்தார்.

தன் அவதார நோக்கத்தை நிறைவேற்ற, சிவ நின்தனை செய்த தட்சனின் யாகம் நடந்த இடத்துக்கு உடனடியாக வீரபத்திரர் விரைந்தார்.

முதலில் அவர் தட்சனின் தலையை வெட்டி வீசினார்.

இதை கண்டதும் யாக புருஷன், மான் வடிவம் கொண்டு ஓடினார்.

அவரையும் வீரபத்திரர் வதம் செய்தார்.

பிரம்மன் தலைகளும் வெட்டப்பட்டன.

தோளில் வெட்டுப்பட்ட இந்திரன், குயிலாக மாறி மறைந்தான்.

கையில் வெட்டுபட்ட அக்னி தேவன் கிளியாக மாறி பறந்தான்.

சூரியனின் பற்கள் உடைந்தன.

சரஸ்வதி மூக்கு அறுக்கப்பட்டது. முப்பத்து முக்கோடி தேவர்களும் சிதறி ஓட யாகசாலை அழிக்கப்பட்டது.

Tags:    

Similar News