ஆன்மிக களஞ்சியம்
- பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான்.
- முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம்.
முருகப் பெருமான் தமிழ்க் கடவுள். சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் முருகனை வணங்கி வருகின்றனர்.
பழமைக்குப் பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான்.
முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம்.
எனவே தமிழே முருகன், முருகனே தமிழ் என்பார்கள்.
முருகன் "ஓம்" எனும் பிரணவப் பொருளாகவும் விளங்குகிறான்.
பிரணவம் என்றால், "சிறந்த புதிய ஆற்றலைத் தருவது" என்று பொருள்.
முருகன் தன்னை நாடி, தேடி வருபவர்களுக்கு புதிய ஆற்றலை வற்றாமல் கொடுக்கிறான்.