ஆன்மிக களஞ்சியம்
null

சோமவார பூஜை

Published On 2023-12-23 11:22 GMT   |   Update On 2023-12-23 13:20 GMT
  • திருவண்ணாமலை ஆலய பஞ்ச பருவ பூஜைகளில் சோமவார பூஜை வித்தியாசமானது.
  • ஆசையை கைவிட்டால் தான் முக்தி பாதைக்கு செல்ல முடியும்.

திருவண்ணாமலை ஆலய பஞ்ச பருவ பூஜைகளில் சோமவார பூஜை வித்தியாசமானது.

இதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

பொதுவாக அனைவருக்குமே ஏதாவது ஆசைகள் இருந்து கொண்டே இருக்கும்.

ஆசையை கைவிட்டால் தான் முக்தி பாதைக்கு செல்ல முடியும்.

அதற்கு விரதங்கள் உதவியாக உள்ளன. விரதங்களில் சோமவாரம் விரதம் அதிக பலன்களை தரக்கூடியது.

திருமணம், குழந்தை பாக்கியம், நோய் தீர, எதிரிகளை வெல்ல, நினைத்தது நடக்க சோமவார விரதமும், பூஜையும் கைகொடுக்கும்.

திருவண்ணாமலையில் சோமவார பூஜையை கடந்த சுமார் 43 ஆண்டுகளாக ஒரு அமைப்பு நடத்தி வருகிறது.

இந்த அமைப்பினர் திங்கட்கிழமை தோறும் திருவண்ணாமலையில் சோமவார பூஜையை பொறுப்பேற்று நடத்துகிறார்கள்.

அன்று மாலை இரண்டாம் கால பூஜையின் போது உற்சவ மூர்த்தியான சந்திரசேகரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கிறார்கள்.

இந்த அபிஷேக ஆராதனை மிகவும் சிறப்பாக நடத்தப்படும்.

அதை கண்டு வழிபடுவதே தனி ஆனந்தத்தை தரும்.

அதன்பிறகு உற்சவ மூர்த்தியை அலங்காரம் செய்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள செய்வார்கள்.

அங்கு அவருக்கு தீபாராதனைகள் நடத்தப்படும்.

Tags:    

Similar News