ஆன்மிக களஞ்சியம்

சாஸ்தாவிற்கான மூன்று விரதங்கள்

Published On 2023-11-05 12:23 GMT   |   Update On 2023-11-05 12:23 GMT
  • ஐயப்பனை வழிபடுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் மூன்றாகும்.
  • தண்ணீர் மட்டுமே பருகி முழு விரதம் இருத்தல் உத்தமானது.

ஐயப்பனை வழிபடுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் மூன்றாகும்.

அவை- புத வார விரதம், சனி வார விரதம், உத்திர நட்சத்திர விரதம்.

இந்த விரதங்களை மேற்கொள்பவர்கள், ஏதேனும் ஒரு புதன்கிழமையன்றோ, சனிக்கிழமையன்றோ

அல்லது ஒவ்வொரு மாதத்திலும் வரும் உத்திர நட்சத்திரத்தன்றோ விரதம் மேற்கொள்ள வேண்டும்.

முதல் நாள் பகல் உணவோடு விரதத்தைத் தொடங்கி இரவு உணவை உண்ணாதிருக்க வேண்டும்.

விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராடி, நித்ய கர்மாக்களை முடித்து,

விதிமுறைப்படி ஸ்ரீமஹா சாஸ்தாவை வழிபாடு செய்தல் வேண்டும்.

தண்ணீர் மட்டுமே பருகி முழு விரதம் இருத்தல் உத்தமானது.

நாள் முழுவதும், பாராயணம், ஜபம், தியானம் ஆகியவற்றை மேற்கொண்டு,

ஐயப்பனின் ஆலயத்துக்கும், சென்று வழிபட வேண்டும்.

அதேபோல இரவு முழுவதும் கண்ணயராது ஐயனை தியானித்து, மறுநாள் அதிகாலையில் நீராடி,

சாஸ்தாவை வழிபட்டு அவரின் அடியவருடன் கூடி உண்ண வேண்டும்.

அன்றும் பகலில் உறங்காமல் இரவிலே உறங்குதல் வேண்டும்.

Tags:    

Similar News