ஆன்மிக களஞ்சியம்

புஜன சயன கோலத்தில் ரங்கநாதர்

Published On 2024-03-31 10:33 GMT   |   Update On 2024-03-31 10:33 GMT
  • திருக்கோவிலூர் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் ரங்கநாதர் புஜங்க சயன கோலத்தில் இருக்கிறார்.
  • இவர் முதல் யுகத்தில் அவதாரம் எடுத்தவர்.

பொதுவாக பெருமாள் 8 விதமான சயன கோலத்தில் காட்சி அளிப்பார்.

உத்தான சயனம், தர்ப்ப சயனம், தல சயனம், புஜங்க சயனம், யோக சயனம், மாணிக்க சயனம், வடபத்ர சயனம், வீர சயனம் என்று 8 விதமான கோலத்தில் ரங்கநாதரின் சயன கோலங்களை பல்வேறு ஆலயங்களில் காணலாம்.

திருக்கோவிலூர் ஆதிதிருவரங்கம் ஆலயத்தில் ரங்கநாதர் புஜங்க சயன கோலத்தில் இருக்கிறார்.

இவர் முதல் யுகத்தில் அவதாரம் எடுத்தவர்.முதல் யுகம் பாற்கடலில் பள்ளிக்கொண்டதை குறிக்கும். அதற்கு வெண்மை உகந்தது.

எனவே ஆதிதிருவரங்கம் ரங்கநாத பெருமாளை வெண்மை நிற பூக்களால் வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

முதல் யுகத்தில் பெருமாளின் முதல் அவதாரமாக நடந்தது மச்ச அவதாரம் ஆகும்.

மச்ச அவதாரத்திற்கு உரிய திதியாக நவமி திதி உள்ளது.

ஆகையால் நவமி திதி நாட்களில் இங்கு வழிபடுவது கூடுதல் சிறப்பு.

ஜென்ம நட்சத்திர நாட்களில் சென்று வழிபட்டால் மேலும் பலன் கிடைக்கும்.


Tags:    

Similar News