ஆன்மிக களஞ்சியம்

நாமக்கல் ஆஞ்சநேயர்

Published On 2023-09-14 10:41 GMT   |   Update On 2023-09-14 10:41 GMT
  • நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம், வெள்ளி கவசம் சாத்தப்படுகிறது.
  • நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம், வெள்ளி கவசம் சாத்தப்படுகிறது.

முத்தங்கி, வெண்ணை காப்பு, சந்தன காப்பு அலங்காரமும், புஷ்ப அங்கி அலங்காரமும் செய்யப்படுகிறது.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம் அணிவித்து அவரை தரிசனம் செய்தால், லட்சுமி அருள் கிடைக்கும்.

வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு ஏற்படும்.

சங்கடங்கள் நீங்கும்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் அணிவித்து அவரை தரிசனம் செய்தால், மனதில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.

மனக்குழப்பம் தீரும். அறிவாற்றல் பெருகி மகிழ்ச்சி ஏற்படும்.

திருமணம் கைகூடும்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அணிவித்து அவரை தரிசனம் செய்தால், நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

அதேபோல், நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

நோய்களைத் தீர்க்கும் வெண்ணைகாப்பு

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்து அவரை தரிசனம் செய்தால், நோய்கள் நீங்கும்.

சந்தனக்காப்பு அலங்காரம் செய்து அவரை தரிசனம் செய்தால், லட்சுமியின் அருள் கிட்டும்.

புஷ்ப அங்கி அலங்காரம் செய்து அவரை தரிசனம் செய்தால், மனதில் நினைத்தவை விரைவில் நிறைவேறும்.

3 மாதங்களுக்கு மட்டுமே வெண்ணை காப்பு

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு குளிர் காலத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

எல்லா நாட்களிலும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

வடைமாலை

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் வடைமாலை சாற்றப்படுகிறது.

பொது அபிசேகமும் நடத்தப்படுகிறது.

அமாவாசை நாட்களில் சிறப்பு அபிசேகமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

Tags:    

Similar News