ஆன்மிக களஞ்சியம்

கொடிமர வழிபாடு

Published On 2024-01-31 09:41 GMT   |   Update On 2024-01-31 09:41 GMT
  • ஆலயத்தில் குறைந்தது மும்முறை கொடிமரத்தருகே நமஸ்கரிக்க வேண்டும்.
  • கை இரண்டையும் மேல் தூக்கி தான் ஈஸ்வரரை வணங்க வேண்டும்.

ஆலயத்தில் குறைந்தது மும்முறை கொடிமரத்தருகே நமஸ்கரிக்க வேண்டும்.

மும்முறை வலம் வரவேண்டும். அபிஷேக காலத்தில் பிரதட்சணம் செய்யக்கூடாது.

கொடிமரத்தையும் சேர்த்து பிரதட்சணம் செய்ய வேண்டும்.

ஆலயத்தை விட்டு வெளிவரும்போது கொடி மரத்தருகில் நமஸ்கரிக்க வேண்டும்.

ஈஸ்வரர் சன்னதிக்கு உள்ளே நுழையும் முன்பு துவாரபாலகரை வணங்கிவிட்டு ஈஸ்வரரை தரிசிக்கவும்.

கை இரண்டையும் மேல் தூக்கி தான் ஈஸ்வரரை வணங்க வேண்டும்.

வணங்கி விட்டு தட்சிணாமூர்த்தி சுவாமியையும் மற்றும் பிரகாரத்தில் சுற்றியுள்ள சுவாமிகளையும் தரிசித்துவிட்டு அம்மன் சன்னதிக்கு சென்று அம்மன் தரிசனத்தை முடித்து கொண்டு நவகிரக சன்னதிக்கு வந்து நவகிரஹங்களை இடமிருந்து வலமாக 9 முறை சுற்றி வரவும்.

ஒரு போதும் வலமிருந்து இடமாக சுற்றக்கூடாது. சிலர் வலம் இருந்து இடமாக சுற்றி வருவார்கள்.

இதன் பொருள் முக்தி வேண்டுதல்.

Tags:    

Similar News