ஆன்மிக களஞ்சியம்

செஞ்சிக்கோட்டை கமலக் கண்ணியம்மன் ஆலய ஆடி திருவிழா

Published On 2023-10-02 12:02 GMT   |   Update On 2023-10-02 12:02 GMT
  • அப்போது 10,000 பேருக்கு அன்னதானம் அளிப்பார்கள்.
  • ஆண்- பெண்கள் தீச்சட்டி ஏந்தி வருவார்கள்.

ஆடி மாதத்தில் திருநெல்வேலி திரிபுர பைரவியையும், மற்ற தமிழகப் பகுதிகளில் மகாமாரியம்மனையும் வணங்குவது சிறப்பாகும்.

செஞ்சிக் கோட்டையருகேயுள்ள கமலக் கண்ணியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் பெரிய அளவில் விழா நடைபெறும்.

அப்போது 10,000 பேருக்கு அன்னதானம் அளிப்பார்கள்.

அன்று மாலை அம்மன் புற்றுக் கோவிலிலிருந்து புறப்பட்டு திருக்கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

அன்று மாலை அம்மன் பூங்கரக வடிவில் உலா வருவாள்.

ஆண்- பெண்கள் தீச்சட்டி ஏந்தி வருவார்கள்.

அருகேயுள்ள பெரிய சடையம்மன் ஆலயத்திலும் சின்ன சடையம்மன் ஆலயத்திலும்,

பக்தர்கள் வேல் குத்தியும் எலுமிச்சைப் பழங்களை ஊசியில் குத்தியும் பிரார்த்தனை நிறைவேற்றுவர்.

Tags:    

Similar News