ஆன்மிக களஞ்சியம்
- சபரிமலை செல்வதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தாக வேண்டும் என்பது சாஸ்திரம்.
- பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டால், கலிதோஷங்களிலிருந்து விடுபடலாம்.
சபரிமலை செல்வதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தாக வேண்டும் என்பது சாஸ்திரம்.
ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள் இது எப்படி வந்தது?
மொத்த நட்சத்திரங்கள் 27.
அவற்றுக்குரிய ராசிகள் 12, கிரகங்களின் எண்ணிக்கை 9, இவை மொத்தம் 48.
இந்த 48 தினங்களுக்கு ஒருவர் பகவானிடம் பக்தி வைத்து தரிசித்தால், எந்தவித கலிதோஷங்களும் பிடிக்காது.
நட்சத்திரங்கள், ராசிகள், கிரகங்களால் உண்டாகும் தொல்லைகளில் இருந்து விடுபட்டு,
பகவானுடைய பாதங்களில் சரணாகதி அடைந்து உலக துன்பங்களிலிருந்து மீண்டு வருவதற்காகவே
பக்தர்கள் ஒரு மண்டலமான 48 நாட்கள் காலம் விரதம் மேற்கொள்கின்றனர்.