search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வீரபத்திரரை எவ்வாறு வழிபடுவது?
    X

    வீரபத்திரரை எவ்வாறு வழிபடுவது?

    • நமக்கு தன்னம்பிக்கையும், தைரியமும், உண்டாகிடும், வாழ்வு சிறக்க வழிவகுக்கும்.
    • கார்த்திகை மாத ஞாயிற்று கிழமை, சித்ரா பவுர்ணமியும் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.

    வீரபத்திரரை எப்படி வழிபடுவது?

    அனல் போன்ற கோபம் கொண்டவர் ஸ்ரீ வீரபத்ரர்,

    எனவே அவரை அங்காரனின் (செவ்வாய்) அம்சமாக கொண்டு அவரது வழிபாட்டுக்கு உகந்ததினமாக செவ்வாய் கிழமையை சொல்கிறார்கள்.

    வீரபத்திரரை வழிபடுவதால் பேய்பிடித்தல், பில்லி, சூனியம் எனும் மனநோய்கள் போன்ற கண் காணாத் தொல்லைகள், மற்றும் மனதில் தோன்றும் இனம் புரியாத அச்சம் போன்றவையும் விலகுகிறது.

    நமக்கு தன்னம்பிக்கையும், தைரியமும், உண்டாகிடும், வாழ்வு சிறக்க வழிவகுக்கும்.

    பவுர்ணமி, செவ்வாய் கிழமை, ஞாயிற்று கிழமை, குறிப்பாக கார்த்திகை மாத ஞாயிற்று கிழமை, சித்ரா பவுர்ணமியும் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.

    தேய்பிறை அஷ்டமி தினங்களும் பைரவ வழிபாடு போன்று வீரபத்திரர் வழிபாடும் சில ஆலயங்களில் காணப்படுகிறது.

    பவுர்ணமி வழிபாட்டில் பால், தயிர், போன்ற வெண்மைநிற அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து வெள்ளை நிற வஸ்திரம் (சில இடங்களில் கரையில்லா வெள்ளைவேட்டி சாற்றுவர்) வெள்ளைநிற மலர் மாலைகள் அணிவித்து, வெண்நிறம் கொண்டதயிர்சாதம், பாலன்னம் பால்பாயஸம், வெண்கற்கண்டு, பொங்கல் போன்ற நிவேதனங்கள் செய்து வெள்ளை மலர்களால் அர்ச்சிப்பது சிறப்பு என்பர்.

    Next Story
    ×