என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
வீரபத்திரரை எவ்வாறு வழிபடுவது?
- நமக்கு தன்னம்பிக்கையும், தைரியமும், உண்டாகிடும், வாழ்வு சிறக்க வழிவகுக்கும்.
- கார்த்திகை மாத ஞாயிற்று கிழமை, சித்ரா பவுர்ணமியும் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.
வீரபத்திரரை எப்படி வழிபடுவது?
அனல் போன்ற கோபம் கொண்டவர் ஸ்ரீ வீரபத்ரர்,
எனவே அவரை அங்காரனின் (செவ்வாய்) அம்சமாக கொண்டு அவரது வழிபாட்டுக்கு உகந்ததினமாக செவ்வாய் கிழமையை சொல்கிறார்கள்.
வீரபத்திரரை வழிபடுவதால் பேய்பிடித்தல், பில்லி, சூனியம் எனும் மனநோய்கள் போன்ற கண் காணாத் தொல்லைகள், மற்றும் மனதில் தோன்றும் இனம் புரியாத அச்சம் போன்றவையும் விலகுகிறது.
நமக்கு தன்னம்பிக்கையும், தைரியமும், உண்டாகிடும், வாழ்வு சிறக்க வழிவகுக்கும்.
பவுர்ணமி, செவ்வாய் கிழமை, ஞாயிற்று கிழமை, குறிப்பாக கார்த்திகை மாத ஞாயிற்று கிழமை, சித்ரா பவுர்ணமியும் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.
தேய்பிறை அஷ்டமி தினங்களும் பைரவ வழிபாடு போன்று வீரபத்திரர் வழிபாடும் சில ஆலயங்களில் காணப்படுகிறது.
பவுர்ணமி வழிபாட்டில் பால், தயிர், போன்ற வெண்மைநிற அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து வெள்ளை நிற வஸ்திரம் (சில இடங்களில் கரையில்லா வெள்ளைவேட்டி சாற்றுவர்) வெள்ளைநிற மலர் மாலைகள் அணிவித்து, வெண்நிறம் கொண்டதயிர்சாதம், பாலன்னம் பால்பாயஸம், வெண்கற்கண்டு, பொங்கல் போன்ற நிவேதனங்கள் செய்து வெள்ளை மலர்களால் அர்ச்சிப்பது சிறப்பு என்பர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்