search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியுமான குலசை முத்தாரம்மன்
    X

    சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியுமான குலசை முத்தாரம்மன்

    • எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும்.
    • இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    அழகிய கடற்கரை கிராமமான குலசை என அழைக்கப்படும் குலசேகரப்பட்டினம்

    திருநெல்வேலியிலிருந்து 68 கி.மீ. தொலைவிலும் திருச்செந்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

    இயற்கை எழில் கொஞ்சும் கடலோர கிராமமான குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவிலேயே

    மைசூருக்கு அடுத்தப்படியாக நவராத்திரி பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    9 நாட்கள் மட்டுமின்றி 365 நாட்களும் இங்கே கொண்டாடப்படும் அம்மன் அருள்மிகு முத்தாரம்மன்.

    குலசை முத்தாரம்மன் என்றால் மிக பிரசித்தம்.

    தலப்பெருமை:

    பொதுவாக எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும்.

    ஆனால் இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    குலசை முத்தாரம்மன் கோவிலில் எங்கும் காண முடியாத அதிசயமாக இங்கு

    மூலவர் ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பாள் முத்தாரம்மனும் சுயம்புவாக தோன்றி ஒரே விக்கிரகமாக

    வடக்கு திசை நோக்கி வீற்றிருக்கின்றனர்.

    Next Story
    ×