search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆடி மாத புற்று வழிபாடு
    X

    ஆடி மாத புற்று வழிபாடு

    • ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து, தூய ஆடைகளை அணிந்து நாக பூஜை செய்தால் துன்பங்கள் அகலும்.
    • சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பாம்பு புற்றுக்கு பால் வார்த்து வரவேண்டும்.

    ஆடி வெள்ளிக்கிழமை பெண்களுக்கு முக்கிய தினமாகக் கருதப்படுகிறது. பெண்கள் இக்காலங்களில் பாம்பு புற்றுக்கு பால் வார்த்து, கற்பூரதீபம் காட்டி பூஜித்து வருவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

    நாகசதுர்த்தி, நாக பஞ்சமி நாட்களில் நாகபூஜை செய்வதால் நாகதோஷம், நாகபயம் முதலியவை ஏற்படாது.

    ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து, தூய ஆடைகளை அணிந்து நாக பூஜை செய்தால் துன்பங்கள் அகலும்.

    சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பாம்பு புற்றுக்கு பால் வார்த்து வரவேண்டும். அதேபோல் ராகு, கேது கிரகங்கள் அமைந்துள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்து வந்தால் சர்ப்ப தோஷம் என்று அழைக்கப்படும் நாகதோஷம் நீங்கும்.

    ஒருவரது ஜாதகத்தில் ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களுக்கு இடையில் உள்ள வீடுகளில் மற்ற கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷம் உள்ளது என்று பொருள். இவர் வாழும் பாம்பை முற்பிறவியில் அடித்திருப்பவர் எனச் ஜோதிடம் கூறுகிறது.

    அதேபோல் ஜாதகத்தில் 1,5,7,9 ஆகிய வீடுகளில் ராகு இருந்தாலும் நாகதோஷம் உள்ளது எனக்கருதலாம்.

    Next Story
    ×