search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திலா ஹோமம்
    X

    திலா ஹோமம்

    • திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.
    • கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம சேத்திரம் என்ற ஸ்தலம் உள்ளது.

    மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம். இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.

    திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும். திலம் என்றால் எள் என்று அர்த்தம். திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும். நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு. சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.

    திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும். இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.

    வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.

    கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம சேத்திரம் என்ற ஸ்தலம் உள்ளது. அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

    வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா, இராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.

    Next Story
    ×