search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை- வலியுறுத்திய ரசிகர்களுக்கு அமைச்சர் பதில்
    X

    ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை- வலியுறுத்திய ரசிகர்களுக்கு அமைச்சர் பதில்

    ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என ரசிகர்கள் வைத்த கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார். #IPL2018
    ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அசத்தினார்.

    10 பந்தில் 34 ரன்கள் குவித்த ரஷித் கான், 3 விக்கெட், 3 கேட்ச் மற்றும் ஒரு ரன்அவுட் செய்ய காரணமாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். ரஷித் கானின் ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சை குறித்து பாராட்டி டுவிட் செய்திருந்ததார்.



    ஏராளமான ரசிகர்கள் ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்கி, இந்தியாவிற்காக விளைாட அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று டுவிட் செய்திருந்தார்.

    இதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ‘‘நான் அனைத்து டுவிட்டர்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். குடியுரிமை சம்பந்தான நடைமுறைகளை உள்துறை அமைச்சகம்தான் பார்த்து வருகிறது’’ என்று டுவிட் செய்திருந்தார். பின்னர் இந்த டுவிட்டை நீக்கிவிட்டார்.
    Next Story
    ×