என் மலர்
செய்திகள்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடர்: குல்தீப்-சாஹல் கூட்டணிக்கு 30 விக்கெட்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி தொடரில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து ஜோடி என்ற பெருமையை குல்தீப்-சாஹல் இருவரும் பெற்றனர்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் சுழற்பந்து வீரர்களான குல்தீப் யாதவ்- சாஹல் அசத்தி வருகிறார்கள். அவர்களது பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் திணறி வருகிறார்கள். தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை வெல்ல இருவரும் முக்கிய காரணமாக திகழ்கிறார்கள்.
இருவரும் இதுவரை நடந்துள்ள 5 போட்டியில் 30 விக்கெட்டுக்கு வீழ்த்தி இருக்கிறார்கள். குல்தீப் யாதவ் 16 விக்கெட்டும், சாஹல் 14 விக்கெட்டும் எடுத்துள்ளனர். இதன்மூலம் இருதரப்பு ஒருநாள் போட்டி தொடரில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து ஜோடி என்ற பெருமையை இருவரும் பெற்றனர்.
இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய சுழற்பந்து வீரர்கள் 27 விக்கெட் (6 போட்டி) வீழ்த்தி இருந்தனர்.
இருவரும் இதுவரை நடந்துள்ள 5 போட்டியில் 30 விக்கெட்டுக்கு வீழ்த்தி இருக்கிறார்கள். குல்தீப் யாதவ் 16 விக்கெட்டும், சாஹல் 14 விக்கெட்டும் எடுத்துள்ளனர். இதன்மூலம் இருதரப்பு ஒருநாள் போட்டி தொடரில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து ஜோடி என்ற பெருமையை இருவரும் பெற்றனர்.
இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய சுழற்பந்து வீரர்கள் 27 விக்கெட் (6 போட்டி) வீழ்த்தி இருந்தனர்.
Next Story






