search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ்சுடன் மோதிய கார் தீப்பிடித்து 5 பேர் பலி
    X

    பஸ்சுடன் மோதிய கார் தீப்பிடித்து 5 பேர் பலி

    உ.பி. தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பஸ்சும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பரிதாபமாக கருகி பலியானார்கள்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்-பரேலி தேசிய நெடுஞ்சாலையில் கமாரியா பாலம் அருகே நேற்று காலை ஒரு சுற்றுலா பஸ்சும், ஒரு காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த 5 பேரும் கருகி பலியானார்கள். பஸ்சில் இருந்த 6 பயணிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. விபத்தில் பலியான 5 பேரும் யார் என தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×