search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஞ்சூரில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்
    X

    மஞ்சூரில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

    பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலை தொடர்ந்து மஞ்சூர் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர்.
    மஞ்சூர்:

    பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் பொதுமக்களுக்கு நிலவேம்பு காசாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகபிரியா அறிவுறுத்தியுள்ளார்.

    இதன்படி மஞ்சூர் காவல் சரகத்திற்குட்பட்ட மஞ்சூர் பஜார், எமரால்டு பகுதிகளில் இன்ஸ்பெக்டர் தெஹலத்நிஷா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, சுதாகர் மற்றும் போலீசார் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கியதுடன், சுற்றுபுறங்களில் தண்ணீர் தேங்கி நிற்ககூடிய தேவையற்ற பொருட்களை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். #tamilnews
    Next Story
    ×