search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    எலும்பு திசுக்கள் அழிவு நோயின் அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்
    X

    எலும்பு திசுக்கள் அழிவு நோயின் அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்

    ஆஸ்டியோ நெக்ரோஸிஸ் அவேஸ்குலர் நெக்ரோஸிஸ் ரத்த ஓட்டக் குறைபாடு காரணமாக எலும்புத்திசுக்கள் அழிவதே இந்நோய். இந்த நோய்கான சிகிச்சை முறையை பார்க்கலாம்.
    ஆஸ்டியோ நெக்ரோஸிஸ் அவேஸ்குலர் நெக்ரோஸிஸ் ரத்த ஓட்டக் குறைபாடு காரணமாக எலும்புத்திசுக்கள் அழிவதே இந்நோய், உடனே தடுக்கப்படாவிட்டால், எலும்புகள் சிறுசிறு துண்டுகளாக உடைந்து நொறுங்கும் அபாயம் ஏற்படும்.

    பொதுவாக, இந்நோய் இடுப்பில் ஏற்படும். தவிர, தோள், மணிக்கட்டு, முழங்கால் ஆகிய இடங்களிலும் வரலாம். முழு ஆரோக்கியம் உடையவர்களுக்கு இந்நோய் வராது; ஆரோக்கிக் குறைபாடு உடையவர்களுக்கும், விபத்து காரணமாக காயம் அடைந்தவர்களுக்கும் வாய்ப்பு அதிகம்.

    தொடை எலும்பு உடைவதால் எலும்புக்கு வரும் ரத்தத்தின் அளவு குறைந்து, இந்நோய் வரலாம். இடுப்பு, எலும்பு இடம் பெயரும் நபர்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்நோய் வருகிறது.

    நீண்ட நாட்கள் ஸ்டிராய்டு மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்நோய் வரலாம். இம்மருந்துகளால், ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புச்சத்தைக் கரைக்கும் ஆற்றலை உடல் இழக்கிறது. அதனால் கொழுப்புச் சத்து படிவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் தடைபடுகிறது. நாளடைவில் எலும்புகள் சிதைகின்றன.

    அதிகம் மது அருந்துபவர்களுக்கும், ரத்தக் குழாய்களில் கொழுப்புச் சத்து படிவது நேர்கிறது; அவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். ரத்தம் உறைவது, வீக்கம், ரத்தக் குழாய்களில் வீக்கம் ஆகியன காரணமாகவும், எலும்புக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.

    சில வியாதிகள் காரணமாகவும் இந்நிலை வரலாம். அவை:-

    பரம்பரை காரணமாக வரும் வளர்ச்சிதை மாற்றக் குறைபாடு காரணமாகவும் உறுப்புக்களில், கொழுப்பு சத்துக் கள் படியலாம்.
    ரத்த சோகை காரணமாக வர லாம்.
    கணையத்தில் ஏற்படும் வீக்கம் காரணமாக வரலாம்.
    எச்.ஐ.வி. தொற்று காரண மாக வரலாம்.
    கதிர்வீச்சு சிகிச்சையால் வரலாம்.

    ஆட்டோ இம்யூன் நோய் எனப்படும் உடலின் நோய் எதிர்ப்புத்திறனே உடலுக்கு எதிராக மாறும்போது உண்டாகும் நோய் களில் வரலாம்.உடற்பகுதிகள், திடீரென அழுத்தப் படும்போது, இயல்புநிலை மாறி அழுத்தப்படும் நோய் வருகிறது; அப்போது ரத் தத்தில் வாயுக் குமிழ்கள் உருவாகும்.மேற்கூறிய நோய்கள் காரண மாக, இவ்வியாதி உருவாகலாம். நோய்வரக் காரணமான நோயைக் கண்டறிந்து, அதற்கு முதலில் சிகிச்சை தர வேண்டும்.

    அறிகுறிகள்:

    ஆரம்ப கட்டத்தில், அறிகுறிகள் ஏதும் தென்படா விட்டாலும், நாட்கள் கழியும்போது, பாதிக்கப்பட்ட எலும்பு அதிக அழுத்தம் பெறும்போது வலியுண்டாகும்; வலி நிரந்தரமாகும்; எலும்பும், அதன் பக்கத்திலிருக்கும் மூட்டுக்களும் பாதிக்கப்படும் போது, அவற்றை அசைப்பது கடினமாகி விடும்; ஆரம்ப கட்டத்திலிருந்து, தீவிர நிலை அடைய, பல மாதங்கள்ஆகலாம்.

    சிகிச்சை:

    பாதிக்கப்பட்ட இடங்களின் செயல்பாட்டை உண்டாக்குவது
    எலும்புகள் மேலும் சேதமடையாமல் காப்பாற்றுவது
    வலியைக் குறைப்பது
    ஆகியன சிகிச்சையின் நோக்கம் ஆகும்.

    சிகிச்சை எவ்வளவு தூரம் பலன் தரும் என்பது:


    அவரவர் வயது, நோயின் தீவிரம், பாதிக்கப்பட்ட இடத்தைப் பொறுத்து, பாதிப்பின் அளவைப் பொறுத்து, பாதிப்பிற்கான காரணத்தைப் பொறுத்து அமையும்.
    பாதிப்பிற்கான காரணம் அறியப்பட்டபின் பாதிப்பை நீக்குவதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக, ரத்தம் உறைந்து கட்டியாவதன் காரணமாக இந்நோய் உண்டாகி இருந்தால், ரத்தக் கட்டிகளைக் கரைப்பதற்கான மருந்துகள் தரப்படும்.

    ரத்தக்குழாய்களில் வீக்கம் நோய்க்கு காரணமாக இருந்தால், வீக்கத்தை குறைக்கும் மருந்துகள் தரப்படும். ஆரம்ப கட்டத்தில் இந்நோய் இருப்பது அறியப்பட்டால், வலியைக் குறைப்பதற்கும் மருந்துகள் தரப்படும். பாதிக்கப்பட்ட மூட்டுக்களை அசைப்பதற்கு, பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்படும். தகுந்த உபகரணங்களை உபயோகித்து, பாதிக்கப்பட்ட இடம் அதிகம் அழுத்தப்படாமல் செயல்பட வைப்பர்.(எ.காட்டு ஊன்றுகோல்,) அறுவை சிகிச்சையின்றி வேறு முறைகளால் இந்நோய் தீவிரமாவது தடுக்கப்பட்டாலும், பெரும்பாலானவர்களுக்கு, அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

    அறுவை சிகிச்சை வகைகள்:

    ஆரோக்கியமான எலும்பை ஓரிடத்தி லிருந்து எடுத்து, பாதிக்கப்பட்ட எலும்புக்கு மாற்றாக வைப்பர்.
    பாதிக்கப்பட்ட மூட்டினை வெளியேற்றிவிட்டு செயற்கையாக முட்டியை பொறுத்துவது.
    எலும்பின் உட்பகுதியின் ஒரு பகுதியை வெளியே எடுத்து விட்டு, உள்ளே புது ரத்தக் குழாய்கள் உருவாக இடம் தருவது.
    இடுப்பிலிருக்கும் ரத்த ஓட்டம் குறைந்து எலும்பை நீக்கி விட்டு, அதற்குப் பதிலாக ரத்த ஓட்டம் அதிகம் உள்ள எலும்பை மாற்றி அமைப்பது.

    ஆயுர்வேத சிகிச்சை:

    3 தோஷங்களின் பங்கு:

    ஆயுர்வேத சித்தாந்தப்படி, வாத தோஷ நிலைப்பாடு உடலின் எந்த இடத்தில் மாறுபடுகிறதோ, அதிகமாகிறதோ, அங்கு திசுக்களின் அழிவு நேருகிறது; அதனால் நெக்ரோஸிஸ் வியாதி உண்டாகிறது.

    வாத தோஷம் நிலைப்பாடு மாறுபடுவது, இந்நோய்க்கு அடிப்படைக் காரணமானாலும், சில சமயங்களில் பித்த தோஷம் இவ்வியாதியைத் தூண்டக் காரணமாகின்றது.

    ரத்தக் குழாய்களில் கொழுப்புச் சத்து படிந்து, ரத்த ஓட்டம் தடைபட கபதோஷம் காரணமாகின்றது. ஆகவே, வாத தோஷ நிலைப்பாட்டை சமனப்படுத்தி, திசுக்கள் மேலும் அழியாமல் காக்க வேண்டும்.

    பித்த தோஷம், வியாதியை, தூண்டாமல் காக்க வேண்டும். கபதோ ஷத்தைச் சமனம் செய்து, மீண்டும் ரத்தக் குழாய்களில் படிந்த கொழுப்பு படிமத்தைக் கரைக்க வேண்டும். எலும்புத் திசுக்களுக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். அழிந்த திசுக்களைப் புதுப்பிக்க வேண்டும். பிற காரணங்கள் ஏதும் இருந்தால் அதற்கான சிகிச்சை முறைகளைப் பின்பற்ற வேண்டும்.



    நோய்க்கு அடிப்படையான காரணங்களை அறிந்து சிகிச்சை தருவது:

    எலும்பு முறிவு ஏற்பட்டு அதனால் எலும்புத் திசுக்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப் படுகிறதா? என்பதை அறிந்து, எலும்பு முறிவை முதலில் சரி செய்ய வேண்டும். மூட்டுக்கள் ஏதாவது இடம் பெயர்ந்திருந்தால், அதைச் சரி செய்ய வேண்டும். நோயாளி ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், அதை மெதுவாக் குறைத்து, பின் முழுதும் நிறுத்தி, ஸ்டீராய்டு மருந்துக்கு பதிலாக ஆயுர்வேத மருந்து கொடுத்து எந்த வியாதிக்காக ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்பட்டதோ, அவ்வியாதியைக் குணமாக்க வேண்டும்.

    நோயாளி அதிகமாக மது அருந்திக் கொண்டிருந்தால், அதை நிறுத்த வேண்டும். இவை தவிர வேறு காரணங்கள் இருந்தால், அதற்கு தகுந்து சிகிச்சை தரப்பட வேண்டும். நோய் ஆரம்ப கட்டத்தில் இருப்பின், ஆயுர்வேத சிகிச்சை நல்ல பலன் தரும்; நோய் முற்றிய நிலையில், நோய் காரணமாக, ரத்தக் குழாய்களும், எலும்பும் மேலும் சேதம் அடையாமல் மட்டும் தடுக்கலாம். சிலசூழலில் அறுவை சிகிச்சையும் அவசியமாகலாம். இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டே ஆயுர்வேத சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும்.

    ஆயுர்வேத மருந்துகள்:

    குக்குறுதிக்தகம் கஷாயம், யோகராஜ குக்குறுரதிக்தகம் கஷாயம், கந்த தைலம், ராசனாபஞ்சகம் கஷாயம், தன்வந்த்ரம் (101) தசமூல கஷாயம்.

    வெளியே தடவ:

    முறிவெண்ணை, தன்வந்த்ரம் தைலம், பலா அஷ்வகந்தாதி தைலம், தசமூல சூரணத்தை பாலில் அரைத்து பத்து போடலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் மேற் சொன்ன முறிவெண்ணை, தன்வந்த்ரம் தைலம் ஆகியவற்றை(பிச்சு) துணியில் நனைத்துப் போடலாம். வாயு அதிகம் உண்டாகிய பொருட்களை உண்ணக்கூடாது.

    சையாட்டிக் நோய்க்கான சிகிச்சை முறை

    சையாட்டிக் நோயை குணப்படுத்தும் ஆயுர்வேத சிகிச்சை முறையை பற்றி காண்போம். பஞ்சகர்மா சிகிச்சை முறை மூலமும், உள்ளே சாப்பிடக் கொடுக்கும் மருந்துகள் மூலமும் சையாட்டிகா நோய்க்கு, ஆயுர்வேதம் நல்ல தீர்வு காண்கின்றது.(கிரித்ரசி) ஆயுர்வேதம் சையாட்டிகாவை கிரித்ரசி என்று கூறுகிறது. இதற்கு கழுகு என்று பொருள். பாதிக்கப்பட்ட நோயாளியின் நடை கழுகின் நடைபோன்று இருக்கும்; மேலும் பாதிக்கப்பட்ட நரம்பு கழுகின் அலகினைப் போன்று இருக்கும்.

    ஆயுர்வேதம், சையாட்டிகா நோய், வாத தோஷம் நிலை மாறுபடுவதால் வருவதாக கொள்கிறது. உடலின் அசைவுகளுக்கும், செயல்பாடுகளுக்கும் காரணமானது வாத தோஷம்; கபதோஷம் உடலின் பகுதிகளின் உராய்வுக்கும், உடலில் உள்ள திரவங்களுக்கும் காரணமானது. வாத தோஷ மாறுதலோடு, சில சமயம் கபதோஷ மாறுபாடு காரணமாகவும் சையாட்டிகா நோய் வரும்.

    ஆயுர்வேதம், நிலைமாறுபாடு ஏற்பட்டுள்ள வாத தோஷம் அல்லது வாத கப தோஷங்களை நிலைப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதன்மூலம் ஆரோக்கியத்தை மீட்கிறது.ஆயுர்வேத சிகிச்சை, மூன்று நிலைகளைக் கொண்டது. முதலில் சோதனம் என்னும் கழிவு நீக்கம் மேற்கொள்ளப்படும். செரிமானக் கோளாறு, வளர்ச்சிதை மாற்றக் கோளாறு மற்றும் நோயின் காரணமாக உண்டாகும் கழிவுகளை வெளியேற்றுவது முதன்மையானது.சமனம் என்னும் மாறுபட்ட செயல்பாடுகளுக்கான காரணிகளை சரிபடுத்துதல்.

    ரசாயனம் என்னும் புத்துணர்வு சிகிச்சை. நோய்வாய்ப்பட்ட திசுக்களை மேம்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.

    சிகிச்சைகள்:

    இலைக்கிழி, நவரக்கிழி, பிழிச்சல், தாரா வஸ்தி ஆகிய சிகிச்சை முறைகள், நோயாளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது தரப்படும்.

    மூலிகைகள்:

    துத்தி(சாரணை) நொச்சி, ஆமணக்கு, முருங்கை, சித்தரத்தை, நாவல் உளுந்து ஆகியவை பலன் தருவன.

    மருந்துகள்:

    யோகராஜ குக்குறு, கோக்ஷீர குக்குறு, பிரசாரின்யாதி கஷாயம், சஹஸ்ராதி கஷாயம், ராசன ஏலண்டாதி கஷாயம், புனர்னவாதி கஷாயம், ராசன ஷபீதக கஷாயம் ஆகியன பலன் தரும்.

    எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகள்:

    உளுந்து, கொள்ளு, கோதுமை, சிவப்பரிசி, நெல்லிக்காய், திராட்சை, முரு-ங்கை, மாதுளை, புடலை, பால், நெய்.

    மேலே தடவ:

    * தில தைலம், ஏரண்ட தைலம் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். * மாமிச சூப் கொண்டு தாரா செய்யலாம். * தன ஆம்லா தைலம் கொண்டு தாரா செய்யலாம். * தவிர்க்க வேண்டிய பொருட்கள்: * நிலக்கடலை, கடலைப்பருப்பு, ராஜ்மா ஆகியவை.

    தவிர்க்க வேண்டியவை:

    * அதிகமான உடற்பயிற்சி * இயற்கை உபாதைகளை அடக்குதல் * பகல் தூக்கம் * இரவில் விழித்திருத்தல் * வாகனங்களில் அதிகம் பயணித்தல் (குதிரை, பைக்) ஆகியவை கண்டிப்பாக தவிர்க்கபட வேண்டும்.

    -டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422-2367200, 2313188, 2313194)
    Next Story
    ×