என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மூட்டழற்சி நோய்க்கான காரணங்கள்
Byமாலை மலர்16 March 2018 2:49 AM GMT (Updated: 16 March 2018 2:49 AM GMT)
சரியான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் மூட்டழற்சி பாதிப்பிலிருந்து நம்மை காக்கும் என்பதனை உணர்ந்து பின்பற்றுவோம்.
சிலருக்கு மூட்டு வலி இருக்கும். சிலருக்குத் தோள்பட்டை வலி இருக்கும். ஆனால் பல மூட்டுகளில் பாதிப்பு இருக்கும் பொழுது இதனை பலமூட்டழற்சி என்று கூறுவர். இதன் தாக்குதல் நிதானமாய் பல மாதங்களிலும் ஏற்படலாம். மாறாக திடீரெனவும் ஏற்படலாம்.
* வலி, * மடக்கி நீட்ட முடியாமை, * வீக்கம், * சிவந்து இருத்தல், * சோர்வு, * சக்தி இன்மை, * ஜுரம் 100திக்கு மேல், * வியர்வை, * பசியின்மை, * திடீரென உடல் இளைத்தல் ஆகியவைகள் ஆகும்.
பொதுவில் இதனை பரம்பரை காரணமாகவே கூறுவர். இருப்பினும் மருத்துவ ரீதியாகவும் இதற்கு சில காரணங்கள் உள்ளன.
* புகை, மது, அதிக கஃபின் இவை பழக்கம் அதிகம் இருந்தால் இப்பாதிப்பு ஏற்படுகின்றது.
* சிறு குழந்தைகள் குழந்தை அல்லது குடும்பத்தினர் பிடிக்கும் சிகரெட் சூழலில் வளர்ந்தால் பிற்காலத்தில் அவர்களுக்கு பல மூட்டழச்சி பாதிப்பு ஏற்படுகின்றது.
* வயது கூடும் பொழுதும், ஆண்களை விட பெண்களுக்கும், பரம்பரை காரணமாகவும் இப்பாதிப்பு ஏற்படுகின்றது. பல மூட்டழச்சியில் சில பிரிவுகள் உள்ளன.
* சருமம், சிறு நீரகம், நரம்பு மண்டலம் பாதிக்கும் வகை.
* சோரியாஸிஸ், சரும பாதிப்பு உடையவர்கள்.
எந்த பிரிவானாலும் கீழ்கண்ட பாதிப்புகளை உடையவர்களாக இருப்பர்.
* ஆரம்பத்தில் பஃளூ ஜூரம், சோர்வு இருக்கலாம்.
* விரல்கள் மடிந்து உள்ளங்கை புறம் சுருங்கி கொள்ளலாம்.
* குடலில் வீக்க பாதிப்பு இருக்கலாம்.
மருத்துவர் சில பரிசோதனைகளை நடத்தியே அதன் பிறகே சிகிச்சை அளிக்க முடியும்.
* விரல்களிலோ, மூட்டுகளிலோ பிடிப்பு, வீக்கம், வலி இருந்தால்.
* மூட்டுகள் தொடுவதற்கு மிதமான சூடாக இருந்தால்.
தாமதிக்காது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
பல மூட்டழற்சியினை முறையாக சிகிச்சை எடுக்காவில்
* நுரையீரல் பாதிக்கலாம். மூச்சு வாங்குதல், விடாத இருமல் தோன்றலாம்.
* வறண்ட கண்கள், வீக்கம் ஏற்படலாம்.
* சரும பாதிப்பு ஏற்படலாம்.
* இருதயத்தினை சுற்றிய பகுதியில் வீக்கம். அதனால் நெஞ்சு வலி ஏற்படலாம். ஹார்ட் அட்டாக், பக்க வாத பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இதன் பாதிப்பு பல விதங்களில் கூடும் என்பதால் மருத்துவ சிகிச்சை மிக அவசியம். இதனை பற்றிய ஆய்வுகள் இன்னமும் நிகழ்வதால் இதில் மேன்மேலும் நல்ல முன்னேற்றங்களை மருத்துவ உலகம் தருகின்றது. இருப்பினும் முழு தீர்வினை கொடுக்க முடியாவிட்டாலும் நல்ல முன்னேற்றங்களை தர முடிகின்றது.
* தரமான உணவு * உடற்பயிற்சி இவையும் பெரிதும் உதவுகின்றது.
வலி நிவாரண மருந்துகள் ஆகியவை சிறந்த முன்னேற்றத்தினை அளிக்கும்.
கொலஸ்டிரால்: இந்த வார்த்தையினைக் கேட்டு இன்று அஞ்சாதவர்கள் இல்லை. இது கொழுப்பின் ஒருவகை. உடல் இயக்கத்திற்கு இதுதேவை. நல்ல கொலஸ்டிரால், கெட்ட கொலஸ்டிரால் என பிரிவு படுகின்றது. மொத்த கொலஸ்டிரால் 200 னீரீ/பீறீ-க்கு கீழ் நல்ல கொலஸ்டிரால் 4060 னீரீ/பீறீ. கெட்ட கொலஸ்டிரால் 100 னீரீ/பீறீக் கீழ். இது ஒரு பொதுவான கணக்கு.
இது மாறுவதற்கான காரணங்கள்: * ஆகிய பரம்பரை, * நீரழிவு 2-ம் பிரிவு, * உடல் உழைப்பின்மை, * பரம்பரை இருதய நோய், * குடும்ப ரத்த உறவுகளில் அதிக கொலஸ்டிரால், * உடல் சதை அதிகம், * புகையிலை பழக்கம், * அதிக கொழுப்பு சேர்ந்த உணவு இவை காரணமாகின்றன.
எனவே சரியான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் இந்த பாதிப்பிலிருந்து நன்கு காக்கும் என்பதனை உணர்ந்து பின்பற்றுவோம்.
* வலி, * மடக்கி நீட்ட முடியாமை, * வீக்கம், * சிவந்து இருத்தல், * சோர்வு, * சக்தி இன்மை, * ஜுரம் 100திக்கு மேல், * வியர்வை, * பசியின்மை, * திடீரென உடல் இளைத்தல் ஆகியவைகள் ஆகும்.
பொதுவில் இதனை பரம்பரை காரணமாகவே கூறுவர். இருப்பினும் மருத்துவ ரீதியாகவும் இதற்கு சில காரணங்கள் உள்ளன.
* புகை, மது, அதிக கஃபின் இவை பழக்கம் அதிகம் இருந்தால் இப்பாதிப்பு ஏற்படுகின்றது.
* சிறு குழந்தைகள் குழந்தை அல்லது குடும்பத்தினர் பிடிக்கும் சிகரெட் சூழலில் வளர்ந்தால் பிற்காலத்தில் அவர்களுக்கு பல மூட்டழச்சி பாதிப்பு ஏற்படுகின்றது.
* வயது கூடும் பொழுதும், ஆண்களை விட பெண்களுக்கும், பரம்பரை காரணமாகவும் இப்பாதிப்பு ஏற்படுகின்றது. பல மூட்டழச்சியில் சில பிரிவுகள் உள்ளன.
* சருமம், சிறு நீரகம், நரம்பு மண்டலம் பாதிக்கும் வகை.
* சோரியாஸிஸ், சரும பாதிப்பு உடையவர்கள்.
எந்த பிரிவானாலும் கீழ்கண்ட பாதிப்புகளை உடையவர்களாக இருப்பர்.
* ஆரம்பத்தில் பஃளூ ஜூரம், சோர்வு இருக்கலாம்.
* விரல்கள் மடிந்து உள்ளங்கை புறம் சுருங்கி கொள்ளலாம்.
* குடலில் வீக்க பாதிப்பு இருக்கலாம்.
மருத்துவர் சில பரிசோதனைகளை நடத்தியே அதன் பிறகே சிகிச்சை அளிக்க முடியும்.
* விரல்களிலோ, மூட்டுகளிலோ பிடிப்பு, வீக்கம், வலி இருந்தால்.
* மூட்டுகள் தொடுவதற்கு மிதமான சூடாக இருந்தால்.
தாமதிக்காது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
பல மூட்டழற்சியினை முறையாக சிகிச்சை எடுக்காவில்
* நுரையீரல் பாதிக்கலாம். மூச்சு வாங்குதல், விடாத இருமல் தோன்றலாம்.
* வறண்ட கண்கள், வீக்கம் ஏற்படலாம்.
* சரும பாதிப்பு ஏற்படலாம்.
* இருதயத்தினை சுற்றிய பகுதியில் வீக்கம். அதனால் நெஞ்சு வலி ஏற்படலாம். ஹார்ட் அட்டாக், பக்க வாத பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இதன் பாதிப்பு பல விதங்களில் கூடும் என்பதால் மருத்துவ சிகிச்சை மிக அவசியம். இதனை பற்றிய ஆய்வுகள் இன்னமும் நிகழ்வதால் இதில் மேன்மேலும் நல்ல முன்னேற்றங்களை மருத்துவ உலகம் தருகின்றது. இருப்பினும் முழு தீர்வினை கொடுக்க முடியாவிட்டாலும் நல்ல முன்னேற்றங்களை தர முடிகின்றது.
* தரமான உணவு * உடற்பயிற்சி இவையும் பெரிதும் உதவுகின்றது.
வலி நிவாரண மருந்துகள் ஆகியவை சிறந்த முன்னேற்றத்தினை அளிக்கும்.
கொலஸ்டிரால்: இந்த வார்த்தையினைக் கேட்டு இன்று அஞ்சாதவர்கள் இல்லை. இது கொழுப்பின் ஒருவகை. உடல் இயக்கத்திற்கு இதுதேவை. நல்ல கொலஸ்டிரால், கெட்ட கொலஸ்டிரால் என பிரிவு படுகின்றது. மொத்த கொலஸ்டிரால் 200 னீரீ/பீறீ-க்கு கீழ் நல்ல கொலஸ்டிரால் 4060 னீரீ/பீறீ. கெட்ட கொலஸ்டிரால் 100 னீரீ/பீறீக் கீழ். இது ஒரு பொதுவான கணக்கு.
இது மாறுவதற்கான காரணங்கள்: * ஆகிய பரம்பரை, * நீரழிவு 2-ம் பிரிவு, * உடல் உழைப்பின்மை, * பரம்பரை இருதய நோய், * குடும்ப ரத்த உறவுகளில் அதிக கொலஸ்டிரால், * உடல் சதை அதிகம், * புகையிலை பழக்கம், * அதிக கொழுப்பு சேர்ந்த உணவு இவை காரணமாகின்றன.
எனவே சரியான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் இந்த பாதிப்பிலிருந்து நன்கு காக்கும் என்பதனை உணர்ந்து பின்பற்றுவோம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X