search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சுந்தர்.சி - யார் இயக்கத்தில் தெரியுமா?
    X

    மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சுந்தர்.சி - யார் இயக்கத்தில் தெரியுமா?

    பல வெற்றி படங்களை இயக்கிய சுந்தர்.சி, மீண்டும் பிரபல இயக்குனர் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். #SundarC, #VZDurai
    உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் வெற்றி பெறவே தொடர்ந்து, ‘வீராப்பு, சண்டை, பெருமாள், உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

    மேலும் தான் இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் ‘கலகலப்பு 2’ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அடுத்ததாக அதிக பொருட் செலவில் உருவாக இருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

    இந்நிலையில், மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்தை வி.இசட்.துரை இயக்க இருக்கிறார். வி.இசட்.துரை இதற்கு முன் அஜித்தை வைத்து ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.



    இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×