search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மம்தா பானர்ஜி"

    • மம்தா பானர்ஜி வெளியில் இருந்து (கூட்டணி) அல்லது உள்ளே இருந்து என செய்வார் என்பது எனக்குத் தெரியாது.
    • அவர் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் பா.ஜனதாவுக்குக் கூட செல்ல முடியும்.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசை தோற்கடிக்க நாட்டின் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.

    இந்த சிக்கலால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டி என அறிவித்தார். இதனால் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ்- பா.ஜனதா இடையே முத்தரப்பு போட்டி நிலவுகிறது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து ஏறக்குறைய மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமூகமாக தீர்த்துக் கொண்டது.

    தற்போது நான்கு கட்ட வாக்குப்பதிகள் முடிவடைந்து விட்டனர். இந்தியா கூட்டணி தங்களுக்குதான் வாய்ப்பு என கூறி வருகிறது. அதேவேளையில் 3-வது முறையாக பிரதமாக பதவி ஏற்பது உறுதி என மோடி திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

    ஆனால், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன், மம்தா பானர்ஜி மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆதிர் ரஞ்சன் கூறியதாவது:-

    மம்தா பானர்ஜி வெளியில் இருந்து (கூட்டணி) அல்லது உள்ளே இருந்து என செய்வார் என்பது எனக்குத் தெரியாது. நீங்கள்தான் அவரிடம் கேட்க வேண்டும். ஆனால் அவர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை. அவர் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் பா.ஜனதாவுக்குக் கூட செல்ல முடியும். இந்தியா கூட்டணி பெங்கால் காங்கிரசை கணக்கில் கொள்ளாது என்கிறார். இந்தியா கூட்டணி பற்றி அவர் புகார் கூற இருந்தால், அது உருவானபோது எழுப்பியிருக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சியை அழித்து விடுவதாகவும், காங்கிரஸ் 40 தொகுதிகளை தாண்டாவது எனவும் பா.ஜனதா கூறியது. தற்போது மம்தா சொல்வதின் அர்த்தம் காங்கிரஸ், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரப்போகிறது என்பதுதான்.

    • பா.ஜ.க. அதிகபட்சமாக 200 இடங்களில் வெற்றி என்ற அளவுடன் கட்டுப்படுத்தப்படும்.
    • நமது மத வழக்கங்களாகட்டும் அல்லது உணவுப் பழக்கவழக்கங்களாகட்டும். அனைத்திலும் பா.ஜ.க.வினர் தலையிடுகின்றனர்.

    கல்யாணி:

    மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம், கல்யாணி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    சந்தேஷ்காளி விவகாரத்தில் பா.ஜ.க.வினரும் பிரதமரும் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். உத்தரவாத மன்னர் (மோடி) மேற்கு வங்காளத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்.

    தற்போது பல்வேறு வீடியோக்கள் வெளியாகி உண்மை வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில் அந்தக் காட்சிகளைக் காட்ட வேண்டாம் என்று பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி சேனல்களை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி 295 முதல் 315 வரையிலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும். பா.ஜ.க. அதிகபட்சமாக 200 இடங்களில் வெற்றி என்ற அளவுடன் கட்டுப்படுத்தப்படும். இந்த பாராளுமன்றத் தேர்தலில் 3-வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வர மாட்டார் என்பதே எங்களின் ஒரே உத்தரவாதமாகும்.

    மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த விட மாட்டோம்.

    நமது மத வழக்கங்களாகட்டும் அல்லது உணவுப் பழக்கவழக்கங்களாகட்டும். அனைத்திலும் பா.ஜ.க.வினர் தலையிடுகின்றனர். இதை ஏற்க முடியாது. இது நீண்ட காலத்துக்குத் தொடர முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என் பெற்றோரின் பிறந்தநாள் கூட எனக்கு தெரியாது. அப்படியிருக்க என் பெற்றோரின் சான்றிதழ்களை அவர்கள் கேட்டால் என்னால் எப்படி அவற்றை கொடுக்க முடியும்.
    • குடியுரிமை திருத்த சட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் நீங்கள் வெளிநாட்டினராக மாறி விடுகிறீர்கள்.

    மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், "தேசிய குடிமக்கள் பதிவேட்டை நான் அனுமதிக்க மாட்டேன். அசாமில் 19 லட்சம் இந்து வங்காளிகளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

    என் பெற்றோரின் பிறந்தநாள் கூட எனக்கு தெரியாது. அப்படியிருக்க என் பெற்றோரின் சான்றிதழ்களை அவர்கள் கேட்டால் என்னால் எப்படி அவற்றை கொடுக்க முடியும்.

    குடியுரிமை திருத்த சட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் நீங்கள் வெளிநாட்டினராக மாறி விடுகிறீர்கள்.

    50 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றிதழை அவர்கள் கொண்டு வர சொன்னால், முதலில் பாஜக வேட்பாளர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தில் சான்றிதழ்கள் கொடுத்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்க சொல்லுங்கள்.

    பாஜகவினரே குடியுரிமை திருத்த சட்டத்தில் விண்ணப்பிக்கவில்லை என்றால் நாம் ஏன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டையும் நான் அனுமதிக்க மாட்டேன்" என்று மம்தா தெரிவித்தார். 

    • இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
    • ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்ட இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்திருந்தது.

    இந்த நிலையில் இன்று கெஜ்ரிவால் தொடர்பான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

    இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய பாராளுமன்ற தேர்தல் சூழ்நிலைக்கு ஜாமின் வழங்கி இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

    • கவர்னர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
    • சிசிடிவி காட்சிகளை பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருப்பதாக கவர்னர் தெரிவித்திருந்தார்.

    மேற்கு வங்காள கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவர் கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் போலீசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    ஆனால் சிசிடிவி காட்சிகள் 100 பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும். ஆனால் மம்தா பானர்ஜி மற்றும் மேற்கு வங்காள போலீசாரிடம் வழங்கப்படமாட்டாது என கவர்னர் மாளிகை நேற்று தெரிவித்திருந்தது.

    இ-மெயில் அல்லது டெலிபோன் மூலமாக வேண்டுகோள் விடுக்கும் முதல் 100 பொதுமக்களுக்கு கவர்னரை மாளிகையில் இன்று காலை சிசிடிவி காட்சிகள் திரையிடப்படும் எனத் தெரிவித்திருந்தது.

    அந்த வகையில் இன்று காலை பொதுமக்களுக்கு சிசிடிவி வீடியோ காட்சியகள் திரையிடப்பட்டன.

    இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தில் "92 பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளை பார்வையிட வேண்டுகோள் விடுத்திருந்தனர். எனினும் சிலர்தான் சிசிடிவி காட்சிகளை பார்க்க வந்தனர். இந்த விவகாரத்தில் மக்கள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது." எனத் தெரிவித்துள்ளது.

    அந்த பெண் ஏப்ரல் 24-ந்தேதி மற்றும் மே 2-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் கவர்னர் மாளிகையில் வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

    மே 2-ந்தேதி மாலை 5 மணியளவில் வடக்குப் பகுதியில் உள்ள முதன்மை வாசல் பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் திரையிடப்பட்டன.

    பிரதமர் மோடி மே 3-ந்தேதி மேற்கு வங்காளத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அதற்கு முன்பாக மே 2-ந்தேதி கவர்னர் மாளிகையில் தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவர்னர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார்.
    • காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    மேற்கு வங்காள கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவர் கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் போலீசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை 100 பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும். ஆனால் மம்தா பானர்ஜி மற்றும் மேற்கு வங்காள போலீசாரிடம் வழங்கப்படமாட்டாது என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக கவர்னர் மாளிகை தெரிவித்திருப்பதாவது:-

    பெண் புகார் கொடுத்த சம்பவம் தொடர்பாக சட்டவிரோதம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான மேற்கு வங்காள மாநில போலீசார் விசாரணையின் கீழ் சிசிடிவி காட்சிகளை கவர்னர் மாளிகை வழங்காது.

    பொதுமக்கள் இ-மெயில் அல்லது டெலிபோன் மூலமாக பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தால், முதல் 100 பொதுமக்களுக்கு கவர்னர் மாளிகையில் வைத்து சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்படும். இது நாளை காலை நடைபெறும்.

    அரசியல்வாதி மம்தா பானர்ஜி மற்றும் அவரது காவல்துறையைத் தவிர, சிசிடிவி காட்சிகளை மேற்கு வங்கத்தில் உள்ள எந்த குடிமகனும் பார்க்க முடியும் என்று ஆளுநர் முடிவு செய்துள்ளார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக,

    மேற்கு வங்காள கவர்னராக இருப்பவர் ஆனந்த போஸ். இவர், கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த இளம்பெண் கடந்த 3-ந்தேதி முன்தினம் பரபரப்பு குற்றச்சட்டை தெரிவித்தார்.

    மேலும் இது குறித்து அவர் போலீசிலும் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பதவியில் இருக்கும் கவர்னர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கவர்னர் ஆனந்த போஸ், இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் வாய்மையே வெல்லும் எனக்கூறி இருந்த அவர், இந்த குற்றச்சாட்டுகளால் அரசின் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

    அதேநேரம் தனக்கு எதிராக இன்னும் அதிகமான புகார்களை எதிர்பார்ப்பதாக கவர்னர் ஆனந்தபோஸ் கூறியுள்ளார்.

    • தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதி கேலித்கூத்தாக மாறி வருகிறது.
    • அதற்கு மோடி நடத்தி விதி என மறுபெயரிட வேண்டும்.

    பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் வெறுப்பு பேச்சில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் மவுனம் காத்து வருகிறது. பா.ஜனதா ஆட்சியில் தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதி மோடி நடத்தை விதியாக மாறிவிட்டது என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    மோடி மற்றும் மற்ற பா.ஜனதா தலைவர்களின் வெறுப்பு நிறைந்த பேச்சுகள் குறைந்த சாதி இந்துக்கள், சிறுபான்மையினர், மற்ற விளிம்பு நிலையில் உள்ள பிரிவுகளில் உள்ள மக்களை மிரட்டுவதுபோன்று உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் மவுனம் காத்து வருகின்றது.

    தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதி கேலித்கூத்தாக மாறி வருகிறது. அதற்கு மோடி நடத்தி விதி என மறுபெயரிட வேண்டும். இருந்தபோதிலும், நாட்டு மக்களின் உரிமைகளை மீறும் ஒவ்வொரு செயலுக்கு எதிராகவும் நாங்கள் குரல் கொடுப்போம்.

    2014-ல் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?. சமையல் எரிவாயு இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? பெண் குழந்தைகளை பாதுகாப்பதாக கூறிய அவருடைய "Beti Banchao Beti Padao" என்ன ஆனது?.

    அன்னபூர்னா பந்தர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் ஏழை பெண்களுக்கு 3 ஆயிரம் கொடுப்பதாக போலி வாக்குறுதியை அளித்து வருகிறார்கள். பா.ஜனதா 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்தவர்களுக்கான சம்பளத்தை மூன்று வருடங்களாக நிறுத்தி வைத்துள்ளது. பா.ஜ.க.வும் அரிசிக்கு ஒரு பைசா கூட விடுவிக்கவில்லை, எங்கள் ஏழைகள் நெருக்கடியை உணரக்கூடாது என்பதற்காக முழுத் தொகையையும் நாங்கள் தோளில் சுமந்துள்ளோம்.

    பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், தலித்கள் மற்றும் மற்ற சமூகத்தினரை நாட்டில் இருந்து வெளியேற்றும். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி தலித்கள், எஸ்டிகள், ஓபிசிக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் அடையாளத்தை இழக்க சதி செய்கிறது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • மம்தா பானர்ஜியின் மந்திரி வீட்டில் இருந்து 50 கோடி பறிமுதல் செய்யப்பட்டள்ளது.
    • ஜார்க்கண்டில் காங்கிரஸ் எம்.பி. வீட்டில் இருந்து 350 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

    பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா இன்று மேற்கு வங்காள மாநிலம் புர்பா பர்தமான் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    மம்தா பானர்ஜி (Didi) பா.ஜனதாவை தோற்கடிக்க துர்காபூரில் 15 நாட்களாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 5 வருடங்கள் அவர் அங்கே தங்கியிருந்தாலும் துர்காபூரில் வெற்றி பெற முடியாது என மம்தா பானர்ஜிக்கு சவால் விடுகிறேன். தொழில்துறை நகரமான துர்காபூரில் குற்றவாளிகளுக்காக புதிய தொழிற்சாலை தொடங்கி வைத்துள்ளார். இந்தியா கூட்டணி 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது.

    மம்தா பானர்ஜியின் மந்திரி வீட்டில் இருந்து 50 கோடி பறிமுதல் செய்யப்பட்டள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் எம்.பி. வீட்டில் இருந்து 350 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

    நேற்றிரவு ஜார்க்கண்டில் மந்திரி வீட்டில் இருந்து 50 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி முதல்வர் மற்றும் பிரதமர் என 23 வருடங்கள் இருந்துள்ளார். அவர் மீது சிங்கிள் குற்றச்சாட்டு கிடையாது. அவர் மீது 25 பைசா அளவிற்குக் கூட குற்றச்சாட்டு கிடையாது.

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது, மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரது மருமகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் வரவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வாக்கு வங்கி குறித்து பயப்பட்டார்கள். ஊடுருவியவர்கள் அவர்களுடைய வாக்கு வங்கி. அவர்களை பார்த்து மம்தா பானர்ஜி பயப்பட்டார்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • கவர்னர் மாளிகையில் இன்னும் மோசமான சதி தீட்டப்பட்டு உள்ளது.
    • கவர்னர் மாளிகைக்கு வந்த பிரதமர் மோடி இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள கவர்னராக இருப்பவர் ஆனந்த போஸ். இவர், கவர்னர் மாளிகையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த இளம்பெண் நேற்று முன்தினம் பரபரப்பு குற்றச்சட்டை தெரிவித்தார்.

    மேலும் இது குறித்து அவர் போலீசிலும் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பதவியில் இருக்கும் கவர்னர் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள கவர்னர் ஆனந்த போஸ், இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த விவகாரத்தில் வாய்மையே வெல்லும் எனக்கூறி இருந்த அவர், இந்த குற்றச்சாட்டுகளால் அரசின் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

    அதேநேரம் தனக்கு எதிராக இன்னும் அதிகமான புகார்களை எதிர்பார்ப்பதாக கவர்னர் ஆனந்தபோஸ் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு எதிரான தாராளமான குற்றச்சாட்டுகள் மற்றும் சில அரசியல் சக்திகளால் என் மீது அடிக்கடி வரும் இழிவுபடுத்தல்களை நான் வரவேற்கிறேன்.

    ஆனால் ஊழலை அம்பலப்படுத்துவதற்கும், வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கும் நான் எடுக்கும் உறுதியான முயற்சிகளில் இருந்து இந்த அபத்தமான நாடகங்கள் எதுவும் என்னைத் தடுக்கப் போவதில்லை.

    கவர்னர் மாளிகையில் இன்னும் மோசமான சதி தீட்டப்பட்டு உள்ளது.

    உங்கள் ஆயுதக் கிடங்கில் இருந்து அனைத்து ஆயுதங்களையும் வெளியே கொண்டு வாருங்கள். எனக்கு எதிராக பயன்படுத்துங்கள். நான் தயாராக இருக்கிறேன். எனது வங்காள சகோதர சகோதரிகளின் கண்ணியம் மற்றும் மரியாதைக்காக எனது போராட்டத்தை தொடர்வேன்.

    இவ்வாறு கவர்னர் ஆனந்த போஸ் கூறியிருந்தார்.

    ஆனால் இளம்பெண்ணின் பாலியல் குற்றச்சாட்டுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் மறுத்து உள்ளது. இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தொழில்துறை மந்திரியுமான சஷி பஞ்சா கூறுகையில், 'இந்த பாலியல் குற்றச்சாட்டு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் கவர்னர் மாளிகைக்கு உள்ளேயே நடந்திருப்பதை நம்பவே முடியவில்லை' என்று கூறினார்.

    ஒரு கவர்னர் மீது இத்தகைய புகார் இதுவரை நடந்ததில்லை எனக்கூறிய பஞ்சா, இது நிச்சயமாக கவர்னர் பதவியின் மாண்பை இழிவுபடுத்துவதாகவும், இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கிடையே இளம்பெண் மீது தவறாக நடந்து கொண்டதற்காக கவர்னர் ஆனந்த போசுக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    புர்பா பர்தமான் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கவர்னர் மாளிகையில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர் நேற்று (நேற்று முன்தினம்) வெளியே வந்து, கவர்னரின் பாலியல் தொல்லை குறித்து பேசியிருக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்தேன். அந்த பெண்ணின் கண்ணீர் என் நெஞ்சை நொறுக்கி விட்டது.

    கவர்னர் மாளிகையில் இனி வேலை செய்ய பயமாக இருப்பதாக கூறி அந்த பெண் அழுது கொண்டே வெளியே சென்றார். தான் அடிக்கடி அழைக்கப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

    பா.ஜனதாவினர் சந்தேஷ்காலி குறித்து பேசுவதற்கு முன், கவர்னர் மாளிகையில் பணியாற்றும் பெண்ணிடம் கவர்னர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இவர்கள் தான் நம் தாய், சகோதரிகளின் மானம் பற்றி பேசுகிறார்களா?

    கவர்னர் மாளிகைக்கு நேற்று (நேற்று முன்தினம்) இரவு வந்த பிரதமர் மோடி இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    கவர்னர் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு மேற்கு வங்காள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்கு சதவீதத்தை பார்த்த பிறகு, பா.ஜனதா தோல்வியடையும் என்பதை நாம் உறுதியாக நம்ப முடியும்.
    • மீதமுள்ள ஐந்து கட்ட தேர்தல்களிலும் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள்.

    சிறுபான்மையினர் அதிக அளவில் வசிக்கும் முர்ஷிதாபாத், ஜாங்கிபுர் மக்களவை தொகுதிகளில் மம்தா பானர்ஜி அடுத்தடுத்து தேர்தல் பிரசார பேரணியில் கலந்த கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் வரும்போதெல்லாம் அவர்கள் ஒரு விசயத்தை பயன்படுத்துவார்கள் அல்லது வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்துவார்கள். இந்த முறை அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக பொது சிவில் சட்டத்தை எடுத்துள்ளார்கள். அது குறித்து பரப்புரை செய்கிறார்கள். தேர்தல் சொல்லாடலைத் தவிர அதில் வேறு ஏதும் இல்லை. இதனால் இந்துக்கள் எந்த வகையிலும் பயனடையமாட்டார்கள்.

    வாக்குமுறை மற்றும் முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்கு சதவீதத்தை பார்த்த பிறகு, பா.ஜனதா தோல்வியடையும் என்பதை நாம் உறுதியாக நம்ப முடியும். மீதமுள்ள ஐந்து கட்ட தேர்தல்களிலும் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். பா.ஜனதாவுக்கு பயம் மற்றும் பீதி ஏற்பட்டுள்ளது. தற்போது காவி முகாம் தோற்கடிக்கப்பட வேண்டும்.

    யாராவது ஒருவர் தவறில் ஈடுபட்டால், அதை சரி செய்து கொள்ள முடியும். ஆனால், 26 ஆயிரம் வேலைகளை (ஆசிரியர்கள் வேலை நியமனம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது) பறித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. இது பா.ஜனதாவின் சூழ்ச்சி. உங்களின் வேலைகளை பறித்த அவர்களுக்கு வாக்கு அளிக்காதீர்கள்.

    சிஏஏ சட்டப்பூர்வமான குடிமக்களை வெளிநாட்டினர்களாக்குவதற்கான பொறியாகும். சிசிஏ-வை அமல்படுத்தினால், என்.ஆர்.சி. பின்பற்றப்படும். நாங்கள் இரண்டையும் மேற்கு வங்காளத்தில் அனுதிக்கமாட்டோம். அவர்கள் என்ஆர்சி-யை பயன்படுத்த விரும்புகிறார்கள். நான் அனுதிக்கமாட்டேன்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.
    • உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர்.

    மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் கீழே விழுந்ததில் அவருக்கு நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. 69 வயதான அவர், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தது வந்தார். பின்னர் பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.

    இந்நிலையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று பிரசாரத்தில் ஈடுப்பட்டார். பிரசாரம் முடிந்து துர்காபூர் பகுதியில் ஹெலிகாப்டரில் ஏறும்போது நகரக்கூடிய படிக்கட்டுகளில் மம்தா நடந்து சென்ற போது நிலை தடுமாறி கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

    நிலை தடுமாறி தவறி விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். பின்னர் மம்தா தனது பயணத்தை தொடர்ந்தார்.

    அசன்சோலுக்குச் செல்வதற்காக துர்காபூரில் இருந்து சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள்.
    • திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாநிலத்தில் மோதலில் இருப்பது போல் பாசாங்கு செய்கின்றன.

    கொல்கத்தா:

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் வடக்கு மால்டாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    இந்தியாவின் வளர்ச்சிக்கு மேற்கு வங்காளம் ஒரு காலத்தில் உந்துதலாக இருந்தது. சமூக சீர்திருத்தங்கள், அறிவியல், தத்துவ, ஆன்மிக முன்னேற்றங்கள் மற்றும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தாலும் கூட முக்கிய பங்காற்றியது. ஆனால் முதலில் இடதுசாரிகளும் பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தின் பெருமையையும், மரியாதையையும் குலைத்து, வளர்ச்சியைக் கூட தடுத்தது.

    திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கு வங்காளத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே நிலவுகிறது. மத்திய அரசு வழங்கிய நிதி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த கட்சி செய்த ஊழல்களுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தன. அதே நிலைதான் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் அவர்களுக்கு காத்திருக்கிறது.

    நாட்டின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் திரும்பப் பெற விரும்புகிறார்கள். இந்திய கூட்டணி 370-வது பிரிவை ரத்து செய்ய விரும்புகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் சொல்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தின் பல பயனாளிகளில் தலித்துகளும் அடங்குவர். இந்திய கூட்டணி உங்களது சொத்துக்களை கொள்ளையடிக்க பார்க்கிறது.

    ஏழை மக்களின் சொத்துக்கள் அனைத்தையும் விசாரிக்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து எக்ஸ்ரே மிஷின் கொண்டு வந்து, நாட்டில் உள்ள அனைவருக்கும் எக்ஸ்ரே எடுப்பார்கள், நகை, சொத்து உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றி, அதில் ஒரு பகுதியை தங்கள் வாக்கு வங்கிக்கு கொடுக்க நினைக்கின்றனர். ஆனால் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காத்து ஆதரவளிக்கிறது.

    வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு உங்களது நிலங்களை கொடுத்து அவர்களை இங்கு திரிணாமுல் காங்கிரஸ் குடியமர்த்துகிறது. இந்த வாக்கு வங்கிக்கு உங்கள் சொத்துக்களை கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. நீங்கள் உயிருடன் இருக்கும்போதும், இறந்த பிறகும் கூட காங்கிரஸ் உங்களை கொள்ளையடிக்கும்.

    திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் மாநிலத்தில் மோதலில் இருப்பது போல் பாசாங்கு செய்கின்றன. ஆனால் உண்மையில் இந்த இரு கட்சிகளின் குணமும் சித்தாந்தமும் ஒன்றுதான். திருப்திப்படுத்துவது அந்த கட்சிகள் இடையே பொதுவான விஷயம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    ×