search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிநீக்கம்"

    • கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்புகள் குறைந்து வருகிறது.
    • இண்டீட் நிறுவனம் தனது 8% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

    உலகின் முன்னணி வேலை வாய்ப்பு இணைய தளமான இண்டீட்(Indeed) நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால் தங்கள் நிறுவனத்தின் 8% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக இண்டீட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ஹைம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

    கடந்த ஆண்டு 2,200 ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது பாலின பாகுபாடு
    • 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது "பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின் மோசமான ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    1988 ஆகஸ்டில் ராணுவ செவிலியர் சேவையில் இருந்த லெப்டினன்ட் செலினா ஜான், திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக பணியில் இருந்து நீக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும் போது, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

    திருமணம் செய்து கொண்டார் என்பதை காரணமாக கூறி வேலையை விட்டு நீக்கப்பட்ட, ராணுவத்தில் செவிலியராக இருந்தவருக்கு 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் அவருக்கு இழப்பீடு பணம் வழங்க படாவிட்டால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தும் தேதி வரை தொகைக்கு ஆண்டுக்கு 12% வட்டி வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    • முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 136 சதவீதம் அதிகம்.
    • போட்டியை எதிர்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

    அமெரிக்க கார்ப்பரேட்களில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் Nike, 2024 ஆண்டை ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் துவங்கியுள்ளது.

    கடந்த மாதத்தில் மட்டும் 82 ஆயிரத்து 307 பேரை பணிநீ்கம் செய்வதாக அறிவித்து இருந்தது. இது அதற்கும் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 136 சதவீதம் அதிகம் ஆகும். இதோடு 2009 நிதி நெருக்கடி துவங்கியதில் இருந்து ஜனவரி மாத வாக்கில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பணிநீக்க நடவடிக்கையாக அமைந்தது.

    பெருந்தொற்று காலக்கட்டத்தில் அதிகளவில் ஆட்களை பணியமர்த்தியது மற்றும் வேறு பிரிவுகளில் முதலீடு செய்வது உள்ளிட்டவைகளை பணிநீக்கத்திற்கு காரணமாக Nike நிறுவனம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் Nike Inc. நிறுவனம் 2 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறது. பணிநீக்கத்தால் செலவீனங்களை குறைப்பதன் மூலம் சரிந்து வரும் விற்பனை மற்றும் போட்டியை எதிர்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

    இந்த முறை ஆட்குறைப்பு நடவடிக்கையில் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • கேமிங் பிரிவில் இருந்து 8 சதவீதம் பேர் வேலையிழக்க உள்ளனர்.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆக்டிவிஷன் ப்லிசர்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸ்-இல் பணியாற்றி வருவோரில் சுமார் 1900 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. தொழில்நுட்ப துறையில் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மைக்ரோசாப்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

    தற்போதைய அறிவிப்பின் மூலம் மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவில் இருந்து 8 சதவீதம் பேர் வேலையிழக்க உள்ளனர். இதில் பாதிக்கப்படுவதில் பெரும்பாலானோர் ஆக்டிவிஷன் ப்லிசர்ட்-இல் பணியாற்றுவோர் ஆவர்.

     


    ப்லிசர்ட் தலைவர் மைக் யபரா மற்றும் டிசைன் பிரிவின் மூத்த அலுவலர் ஆலென் ஆதெம் ஆகியோரும் நிறுவனத்தை விட்டு வெளியேறுகின்றனர். இதோடு ப்லிசர்ட் ஏற்கனவே அறிவித்து இருந்த கேம் ஒன்றும் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து இருக்கிறது.

    சமீபத்தில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் 5 லட்சத்து 73 ஆயிரத்து 621 கோடி ரூபாய்க்கு ஆக்டிவிஷன் ப்லிசர்ட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. இதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனம் கேமிங் பிரிவில் அதிக கவனம் செலுத்தவும், கேமிங்கில் முன்னணியில் உள்ள சோனியை எதிர்கொள்ளவும் திட்டமிட்டது.

    • 1 வருடத்திற்கும் மேலாக பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன
    • திறன் அடிப்படையிலான தரவரிசை பட்டியலில் கீழே உள்ளவர்கள் நீக்கப்படுவார்கள்

    2020 கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொடங்கிய பொருளாதார மந்தநிலை நாளுக்கு நாள் மோசமடைவதால் உலகெங்கிலும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இணையவழி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

    அதனால் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக அத்துறையில் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரூவை மையமாக கொண்டு செயல்படும் பிரபல இணையதள வர்த்தக நிறுவனம், ஃப்ளிப்கார்ட் (Flipkart).

    2007ல் புத்தகங்களை இணையவழியில் விற்பதற்காக தொடங்கப்பட்ட ஃப்ளிப்கார்ட், பிறகு நுகர்வோர் மின்னணு சாதனங்கள், நவீன ஆடைகள், அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை இணையதளத்தின் மூலம் விற்பனை செய்து, பெரும் லாபம் ஈட்டி வந்தது.

    இதே துறையில் உள்ள அமெரிக்காவை மையமாக கொண்ட புகழ் பெற்ற அமேசான் நிறுவனத்திற்கு ஃப்ளிப்கார்ட் போட்டியாக இயங்கி வருகிறது.

    2018ல் அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு முன்னணி மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனை நிறுவனமான வால்மார்ட் (Walmart), ஃப்ளிப்கார்ட் நிறுவன பங்குகளில் 77 சதவீதத்தை விலைக்கு வாங்கியது.

    2022-23 நிதியாண்டில் ஃப்ளிப்கார்ட் ரூ.4,890 கோடி நஷ்டத்தை சந்தித்ததாக 2023 அக்டோபர் மாதம் தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், திறன் அடிப்படையில் தரவரிசை ஏற்படுத்தி அப்பட்டியலில் கீழே உள்ள சுமார் 7 சதவீதம் வரை பணியாளர்களை நீக்க ஃப்ளிப்கார்ட் முடிவு செய்துள்ளது.

    பணிநீக்க நடவடிக்கை வரும் ஏப்ரலில் நிறைவடையும்.

    புதியதாக பணியாளர்களை சேர்ப்பதை ஃப்ளிப்கார்ட் சில மாதங்களுக்கு முன்னரே நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மொத்த பணிநீக்கங்களில் 70 சதவீதம் பேர் அமெரிக்காவில் பணி இழந்தனர்
    • அக்சென்சர் 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது

    முன்னர் எந்த வருடங்களிலும் இல்லாத அளவு, கடந்த 2023ல் பல தனியார் துறைகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கூகுள், மைக்ரோசாஃப்ட், வெரிசான், காக்னிசன்ட் போன்ற பன்னாட்டு மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப பெருநிறுவனங்களிலும், ஸ்டார்ட் அப் எனப்படும் புதியதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களிலும் இந்த சூழல் நிலவியது.

    உலகம் முழுவதும் சுமார் 2.6 லட்சம் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் அமெரிக்காவில் வேலையிழந்தவர்கள். மொத்த பணிநீக்கங்களில் 70 சதவீதம் (1.79 லட்சம் பேர்) அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

    16,400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இந்தியா 2-ஆம் இடத்தில் உள்ளது.

    13,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு ஜெர்மனி 3-ஆம் இடத்தில் உள்ளது.

    11,100 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு சுவீடன் 4-ஆம் இடத்திலும், 9400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இங்கிலாந்து 5-ஆம் இடத்திலும் உள்ளது.

    இந்தியாவில், கடந்த 2023 டிசம்பர் மாதம் மட்டுமே 1000 பணியாளர்கள் பேடிஎம் (Paytm) நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    அமெரிக்க-அயர்லாந்து நாடுகளை மையமாக கொண்ட மென்பொருள் பெருநிறுவனமான அக்சென்சர் (Accenture) 19,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கியது.

    இணையதள கல்வி நிறுவனமான பைஜு'ஸ் (Byju's) சுமார் 4 ஆயிரம் பணியாளர்களையும், இணைய வணிக வர்த்தக நிறுவனமான அமேசான் 500 பணியாளர்களையும் நீக்கியது.

    கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு உலகம் முழுவதும் தோன்றியுள்ள மந்தமான பொருளாதார சூழல், அதிகரிக்கும் விலைவாசியினால் மக்களிடம் சேமிப்பு குறைதல், தொழில்நுட்ப சேவைக்கான தேவை குறைவு, உலகளாவிய போர் சூழல், பணியாளர்களுக்கான கட்டுக்கடங்காத சம்பள உயர்வு உள்ளிட்ட பல காரணங்கள் நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கை கூறப்படுகின்றன.

    உலகளாவிய பொருளாதார நிலைமை மேலும் சரிவடைந்தால், பணிநீக்கங்கள் இவ்வருடமும் தொடர்வது மட்டுமின்றி அதிகரிக்கலாம் என மனித வள நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    • பணி நீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டுள்ளது.
    • செலவீனங்களில் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும்.

    பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன் தனது விற்பனை, பொறியியல் பிரிவுகளில் பணியாற்றி வந்த 100-க்கும் அதிக ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது. நிர்வாக ரீதியிலான பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தியதை அடுத்து பணி நீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டுள்ளது.

    செலவீனங்களை குறைக்கும் நோக்கிலும், பணிகளை எளிமையாக்கும் நோக்கிலும் பல்வேறு பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பேடிஎம் பயன்படுத்த துவங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த செலவீனங்களில் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று பேடிஎம் தெரிவித்து இருக்கிறது.

     


    முன்னதாக 2021-ம் ஆண்டு பேடிஎம் நிறுவனம் 500-இல் இருந்து 700 பேர் வரை பணிநீக்கம் செய்தது. அப்போது ஊழியர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றவில்லை என குற்றம்சாட்டி பணிநீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டது. 

    • இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்.

    சர்வதேச அளவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இன்டெல் உள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட தொடர் நிதி நெருக்கடி காரணமாக இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து, இதுவரை நூற்றுக்கும் அதிமானோரை பணி நீக்கம் செய்துள்ளது.

    அந்த வகையில், பணி நீக்க நடவடிக்கையின் ஐந்தாவது கட்டமாக 200-க்கும் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டு வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போதைய பணி நீக்க நடவடிக்கை டிசம்பர் 31-ம் தேதி துவங்கும் என்றும் இதில் 235 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இரண்டு வார காலங்களில் பணி நீக்க நடவடிக்கை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

    "நிறுவனம் முழுக்க பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது, செலவீனங்களை குறைத்து நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான யுக்திகள் கையாளப்படுகிறது," என இன்டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

    • தன்பாலின ஈர்ப்பாளராக இருந்த இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
    • சீக்கிய மதகுரு ஹர்தேவ் திருமணம் செய்து வைத்தார்.

    பஞ்சாப், பதிந்தா நகரை சேர்ந்த மணிஷா(வயது 21), டிம்பிள்(27). இணை பிரியாத தோழிகளான இருவரும் சண்டிகர் அருகில் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை செய்தபோது காதலித்தனர்.

    தன்பாலின ஈர்ப்பாளராக இருந்த இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து பெற்றோர் மூலமாக உள்ளூர் சீக்கிய குருத்வாராவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என 70 பேர் இத்திருமணத்தில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சீக்கிய மதகுரு ஹர்தேவ் திருமணம் செய்து வைத்தார்.

    பின்னர் இந்த திருமணம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. உடனே, இதுகுறித்து சீக்கிய மத குருக்களின் தலைவரான ரக்பீர் சிங் தன்பால் திருமணம் இயற்கைக்கு மாறானது. சீக்கிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்றார். இதை தொடர்ந்து மதகுரு ஹர்தேவ் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • அந்நிறுவனம் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் சம்பந்தமான வேலைகளை செய்து வருகிறது
    • அனில், வீடியோ காலிங் முறையில் தனது தாய் மொழியான இந்தியில் உறவினருடன் உரையாடினார்

    அமெரிக்க ராணுவத்திற்காக ஏவுகணை சம்பந்தமான ஒப்பந்ததாரராக செயல்படும் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள பார்ஸன்ஸ் கார்ப்பரேஷன்.

    அந்நிறுவனம் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் சம்பந்தமான வேலைகளை செய்து வருகிறது. அங்கு பணியாளர்களுக்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அதிகம். அலுவலகத்தில் முக்கியமான தகவல் பரிமாற்றங்கள் நடைபெறும் போது அலைபேசியில் பேசுவதும், பின்னணியில் நிறுவனத்தின் தகவல்கள் தெரியும் விதமாக வீடியோ காலிங்கில் பேசுவதும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பல வருடங்களாக பணி புரிந்து வந்தவர் அனில் வார்ஷ்னி (78).

    நோயுற்றிருந்த இவரது உறவினர் ஒருவர், இறக்கும் தருவாயில் இருந்தார். அவரிடம் இருந்து வந்த ஒரு அலைபேசி அழைப்பை தவிர்க்க விரும்பாத அனில், அலுவலகத்திலேயே வீடியோ காலிங் முறையில் தனது தாய் மொழியான இந்தியில் அவருடன் உரையாடினார்.

    இதனை அவருடன் பணி புரியும் மற்றொரு ஊழியர் கவனித்தார். பாதுகாப்பு கட்டுப்பாடுகளை அனில் மீறுவதாக அந்த ஊழியர் அனிலிடம் கூறி, மேலிடத்திலும் புகார் செய்துள்ளார்.

    இதனையடுத்து வார்ஷ்னி, பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது உடைமைகளுடன் உடனே அவர் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டர்.

    தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு எதிர்வினையாக தன்னை பணியிலிருந்து நீக்கிய நிறுவனத்தின் மீதும், அமெரிக்க ராணுவ செயலர் ஜேம்ஸ் ஆஸ்டின் மீதும் அனில் வார்ஷ்னி வழக்கு தொடர்ந்துள்ளார்.

    தன்னை மீண்டும் பணியில் சேர்த்து, தான் முன்பிருந்த பதவிக்கு நிகரான பணியில் அமர்த்த கோரியும், பழைய சலுகைகளை மீண்டும் வழங்க கோரியும் மற்றும் தனது மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை நீக்கவும் அனில் கோரியுள்ளார். இதற்கு அந்நிறுவனம் சம்மதிக்கவில்லையென்றால், அதற்கு ஈடாக ஒரு தொகையை கோரியுள்ளார்.

    இது மட்டுமல்லாது தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாகவும் ஒரு பெரும் தொகையை நஷ்ட ஈடாகவும் அனில் கோரியுள்ளார்.

    • மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, உதவி இயக்குநர் ரத்தினமாலா ஆய்வு செய்தார்.
    • ஊராட்சி செயலரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் மடப்பட்டு கிராம ஊராட்சி யில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சியின் கூட்ட அறிவிப்பு பதிவேடு, தீர்மான பதிவேடு, ஊராட்சி பதிவேடுகள் 1 முதல் 31 பதி வேடுகள் முறையாக பரா மரிக்காதது, மற்றும் ஊராட்சியின் தீர்மானம் செலவினசீட்டுகள் இல்லா மல் செலவினம் மேற்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டது.

    மேலும், இந்த குறை பாடுகள் காரணமாக 1994 -ம் ஆண்டுதமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 (1) (அ) மற்றும் பிரிவு 206(1) (அ) -ன் கீழ்ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆகியோர்களுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஊராட்சிகள் சட்டம் 1994-ம் ஆண்டு பிரிவு 203-ன்படி, மடப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகியோர் கை யொப்பமிடும் அதிகா ரத்தினை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும், ஊராட்சி பணிகளையும், கணக்குகளையும் சரிவர செய்யாத காரணத்தினால் ஊராட்சி செயலரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப் பணிகளை கவனிக்க தவறிய சம்மந்தப்பட்ட அலு வலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும், இது போன்று ஊராட்சிகளில் முறைகேடுகளில் ஈடுபடு வோர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மறுகட்டமைப்பு செலவீனங்களுக்காக மெட்டா நிறுவனம் ஏற்கனவே பல மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.
    • மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட்டுள்ள தொகை பற்றிய விவரங்கள் வெளியானது.

    மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல கட்டங்களாக நடைபெற்று வரும் பணிநீக்க நடவடிக்கையில் உலகம் முழுக்க பணியாற்றி வந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், மெட்டா நிறுவனம் 2023 காலாண்டு முடிவுகளை பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற அறிக்கையில் சமர்பித்து இருக்கிறது. இதில் மெட்டா நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட்டுள்ள தொகை பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

    பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எவ்வளவு தொகை செலவிடப்பட்டு உள்ளது என்ற விவரங்களை மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி மெட்டா நிறுவனம் பணிநீக்க ஊதியம் மற்றும் தனிப்பட்ட செலவீனங்களுக்கு மட்டும் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் கோடி) செலவாகும் என்று அறிவித்து இருக்கிறது.

    மறுகட்டமைப்பு செலவீனங்களுக்காக மெட்டா நிறுவனம் ஏற்கனவே பல மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. இதில் பணிநீக்க ஊதியம், பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் கொடுப்பதாக அறிவிக்கப்பட்ட இதர பலன்களும் அடங்கும்.

    பணிநீக்க நடவடிக்கைக்கு பெரும் தொகை செலவிடப்பட்டு இருக்கும் நிலையிலும், மெட்டா நிறுவன வருவாயில் இது நல்ல பலன்களை ஏற்படுத்தி இருக்கிறது. பணிநீக்க நடவடிக்கைகள் காரணமாக 2023 முதல் காலாண்டில் மட்டும் மெட்டா நிறுவன வருவாய் 28.65 பில்லியன் டாலர்கள் ஆகும். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மூன்று சதவீதம் அதிகம் ஆகும். வருடாந்திர அடிப்படையில் இது ஆறு சதவீதம் அதிகம் ஆகும்.

    "2022 ஆண்டில் நிறுவனத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய திட்டங்கள் மற்றும் வியாபார கவனம் உள்ளிட்டவைகளை மாற்றியமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். மார்ச் 31, 2023 வரையிலான காலக்கட்டத்தில் 2022 பணிநீக்க நடவடிக்கைகளை நிறைவு செய்து, டேட்டா செண்டர் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம்," என்று மெட்டா தெரிவித்து உள்ளது.

    ×