search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LS Polls"

    • கடந்த முறையை விட அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம்- அமித் ஷா
    • உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் எங்களுடைய கூட்டணி நல்ல நிலையில் உள்ளது- டி.கே. சிவகுமார்

    மக்களவை தேர்தலில் 400 இடங்கள் இலக்கு நிர்ணயித்து பா.ஜனதா களம் இறங்கியுள்ளது. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் பா.ஜனதாவுக்கு அவ்வளவு இடம் கிடைக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

    கள நிலவரம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இல்லை. இதனால்தான் பிரதமர் மோடி விரக்தியில் இந்து-முஸ்லிம் குறித்து பேசுகிறார் என விமர்சிக்கின்றனர்.

    அதேவேளையில் 3-வது முறையாக பிரதமராக தேர்ந்ததெடுக்கப்பட்ட பின், முதல் 100 நாள் திட்டத்திற்கான வேலைகளில் மும்முரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்து வருகிறார்.

    கடந்தமுறை உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா 65 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை அதைவிட அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என அமித் ஷா உறுதியாக தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நாங்கள் (இந்தியா கூட்டணி) 40 இடங்களில் வெற்றி பெறுவோம் என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டி.கே. சிவகுமார் கூறுகையில் "உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் எங்களுடைய கூட்டணி நல்ல நிலையில் உள்ளது. நாங்கள் 40 இடங்களில் வெற்றி பெறுவோம். எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தேன். அப்போது எங்கள் கட்சியின் வாக்குறுதிகள் பற்றி குறிப்பிட்டேன்

    ஏழை மக்களுக்கு மாதந்தோறும் கூடுதலாக 10 கிலோ இலவச ரேசன் வழங்கப்படும் என கார்கே மேலும் அறிவித்துள்ளார். ஆகவே, முடிவுகள் எங்களுக்கு சாதமாக இருக்கும்.

    இவ்வாறு டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    • மேற்கு வங்காளத்தில் 24 முதல் 30 வரையிலான இடங்களில் வெற்றி பெறுவோம்.
    • உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை 65 இடங்களில் வெற்றி பெற்றோம். இந்தமுறை அதைவிட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா இன்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    ஜூன் 4-ந்தேதி தென்இந்தியாவில் பா.ஜனதா மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். என்னுடைய கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகளை இணைத்தால் பா.ஜனதா தனியாக மிகப்பெரிய கட்சியாக பா.ஜனதா உருவெடுக்கும்.

    மேற்கு வங்காளத்தில் 24 முதல் 30 வரையிலான இடங்களில் வெற்றி பெறுவோம்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை 65 இடங்களில் வெற்றி பெற்றோம். இந்தமுறை அதைவிட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • 2014-ம் ஆண்டில் 78.41 சதவீத வாக்குகளும், 2019-ல் 79.77 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.
    • 5,600 வாக்கு மையங்களில் 1200-க்கும் மேற்பட்ட வாக்களார்கள் 6 மணியை தாண்டிய நிலையிலும் டோக்கன் பெற்று வாக்களித்தனர்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாக 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தோராயமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் 81.86 சதவீத வாக்குகள் பதிவானதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.

    EVMs மூலமாக 80.66 சதவீத வாக்குகளும், தபால் வாக்குகள் மூலம் 1.2 சதவீத வாக்குகளும் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி மீனா தெரிவித்துள்ளார்.

    வாக்களிக்க 4.13 கோடி பேர் தகுதியானவர்கள் என்ற நிலையில், 3.33 கோடி பேர் (3,33,40,560) 25 மக்களவை இடங்களுக்கும், 3,33,40,333 பேர் 175 சட்டமனற இடங்களுக்கும் வாக்களித்துள்ளனர்.

    நான்காவது கட்டமாக நடைபெற்ற தேர்தலில் நட்டிலேயே அதிகமாக ஆந்திராவில்தான் அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான வாக்குப்பதிவு இதுவாகும் என மீனா தெரிவித்துள்ளார்.

    2014-ம் ஆண்டில் 78.41 சதவீத வாக்குகளும், 2019-ல் 79.77 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலமாக (ஆந்திரா + தெலுங்கானா) இருந்தபோது கூட இவ்வளவு அதிகமாக வாக்குகள் பதிவாகவில்லை.

    மக்கள் வாக்களிக்க ஆர்வம் கட்டினர். வெளிநாட்டில் வசிக்கும் பெரும்பாலானோர் தாயகம் திரும்பி தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் என அதிகாரி தெரிவித்தார். காலை நேரத்தில் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தது. 4 மணிக்குப் பிறகு அதிக அளவிலான மக்கள் திரணடு வந்து வாக்களித்தனர்.

    5,600 வாக்கு மையங்களில் 1200-க்கும் மேற்பட்ட வாக்களார்கள் 6 மணியை தாண்டிய நிலையிலும் டோக்கன் பெற்று வாக்களித்தனர். 3,500 வாக்கு மையங்களில் நேரம் நீட்டிக்கப்பட்டது. ஒரு மையத்தில் கடைசி வாக்கு புதன்கிழமை (இன்று) அதிகாலை 2 மணிக்கு பதிவானது.

    33 இடங்களில் 350 அறைகளில் வாக்கு எந்திரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மறு வாக்குப்பதிவு தொடர்பாக பரிந்துரை வரவில்லை. ஜூன் 4-ந்தேதி முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது.

    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு 2019-ல் நீக்கிய பின்னர், காஷ்மீரில் அமைதி திரும்பியது.
    • ஆனால் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தை காண்கின்றோம்.

    பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா இன்று மேற்கு வங்காள மாநிலம் செரம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு 2019-ல் நீக்கிய பின்னர், காஷ்மீரில் அமைதி திரும்பியது. ஆனால் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தை காண்கின்றோம். முன்னதாக இங்கு அசாதி (Azaadi- சுதந்திரம்) கோஷத்தை இங்கே கேட்டோம். தற்போது அதே கோஷத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கேட்கிறோம். முன்னதாக இங்கே கல் எறிதல் சம்பவங்கள் (ராணுவ வீரர்கள், பாதுகாப்புப்படை வீரர்கள் மீது) நடைபெற்றது. தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷமீரில் நடைபெறுகிறது.

    மணிசங்கர் அய்யர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் அணுகுண்டு வைத்திருப்பதால் அதை செய்யக்கூடாது என்கிறார்கள். ஆனால், இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அதை நாங்கள் எடுப்போம் எடுத்துக் கொள்வோம் என்பத நான் சொல்கிறேன்.

    ஊடுருவியவர்கள் அல்லது சிஏஏ வேண்டுமா என்பதை பெங்கால் முடிவு செய்யும். ஜிகாத்திற்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது விகாஸ்க்கு வாக்கு அளிக்க வேண்டுமா என்பதை பெங்கால் முடிவு செய்யும். மம்தா பானர்ஜி சிஏஏ-விற்கு எதிராக உள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவியர்வர்கள ஆதரித்து பேரணி மேற்கொள்கிறார்.

    இவ்வாறு அமித் ஷா பேசினார்.

    • ஆந்திராவில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
    • ஏழு அட்டை பெட்டிகள் கட்டுகட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

    இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்து வருகிறது. இதனால் தேர்தல் ஆணையம் பறக்கும்படை அமைத்து தீவிர சோதனை நடத்தி வருகிறது. இதனால் ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணம் சிக்கிய வண்ணம் உள்ளது.

    ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் நல்லஜார்லா மண்டல் அருகே ஆனந்தபள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் அந்த வாகனம் கவிழ்ந்து டிரைவர் காயம் அடைந்தார். அந்த பகுதி மக்கள் காயம் அடைந்த அவரை மீட்டனர். அப்போது வாகனத்தில் இருந்த ஏழு பெரிய பெட்டியில் பணம் இருப்பதாக சந்தேகப்பட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது ஏழு பெட்டிகளிலும் கட்டு கட்டாக பணம் இருந்ததை கண்டனர்.

    உடனே அதிகாரிகளை வரவழைத்து பணத்தை பறிமுதல் செய்தனர். அப்போது பெரிய அட்டை பெட்டிகளில் ஏழு கோடி ரூபாய் இருந்தது தெரியவந்து. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் காயம் அடைந்த டிரைவரை மருத்துவனையில் சேர்த்துள்ளனர். பணம் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தில் நாளை மறுதினம் (15-ந்தேதி) 25 மக்களவை தொகுதிகளுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது.

    • தேர்தல் வாக்குப்பதிவு சதவீத தரவுகள் திருத்தப்பட்டது குறித்து கார்கே கடிதம்.
    • வாக்குப்பதிவு குறித்த தரவுகள் முரண்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இதுவரை இல்லாத வகையில் மிகவும் குறைவாக உள்ளது.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. வாக்குப்பதிவு காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். சில காரணங்களுக்கான ஒன்றிரண்டு இடங்களில் நேரம் மாற்றப்படலாம்.

    வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தோராயமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்குள் சரியான வாக்குப்பதிவு தரவுகள் வெளியிடப்படும். ஆனால் முதற்கட்டம் மற்றும் 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து ஒன்றிரண்டு நாட்களுக்குப் பிறகும் வாக்குப்பதிவு தரவுகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் திருத்தம் செய்து வெளியிடப்பட்டது. ஐந்து முதல் ஆறு சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியிருந்ததாக தகவல் வெளியானது.

    இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். தேர்தல் ஆணையமும் விளக்கம் அளித்திருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவரும், இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான மல்லிகார்ஜூன கார்கே, இது தொடர்பாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அதில் வாக்குப்பதிவு சதவீத தரவுகள் குறித்த முரண்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இதுவரை இல்லாத வகையில் மிகவும் குறைவாக உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    தேர்தல் ஆணையம் மீது சந்தேகத்தை எழுப்பும் வகையில் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் மல்லிகார்ஜூன கார்கேவை கடுமையாக எச்சரித்துள்ளது.

    தேர்தல் ஆணையம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள சுமத்தியுள்ளார். தேர்தல் சுமூகமாகவும் நியாயமான முறையிலும் நடந்து வருவதில் குழப்பத்தையும் தவறான கருத்தை பரப்பி இடையூறுகளை உருவாக்கும் நோக்கில் கடிதம் இருப்பதாக கண்டித்துள்ளது.

    சந்தேகங்கள் மற்றும் நல்லிணக்கமின்மை தவிர, அசாதாரண சூழ்நிலையை உருவாக்கலாம். நேரடி தேர்தல் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தின் மீதான ஆக்கிரமிப்பு எனவும் தெரிவித்துள்ளது.

    மேலும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் நடத்தை விதிகளை நேரடியாக பாதிக்கும் எந்தவொரு செயலுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

    • ஜூன் 4-ந்தேதி இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்ட் 15-ந்தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளை தொடங்குவோம்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ஒருவரான ராகுல் காந்தி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அதில் "ஜூன் 4-ந்தேதி இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்ட் 15-ந்தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளை தொடங்குவோம்.

    மோடியின் பொய் பிரச்சாரத்தை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம். வேலையை தேர்ந்தெடுங்கள் வெறுப்பை அல்ல. பதவி கைவிட்டுப் கோகும் பயத்தில் மோடி பல்வேறு நாடகங்களை நடத்தி வித்தை காட்டுகிறார்" இளைஞர்கள் உத்தரவாதம் குறித்து பேசியுள்ளார்.

    • இன்று நாட்டின் எல்லா பகுதியிலும் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொண்டு வருகிறார்கள்.
    • தலித்கள், பழங்குடியினர்கள், பிற்படுத்தப்பட்டோர்கள், சிறுபான்மையினர்கள் பயங்கரமான பாகுபாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள்.

    மக்களவை தேர்தலில் இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இன்று நாட்டின் எல்லா பகுதியிலும் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொண்டு வருகிறார்கள். பெண்கள் அட்டூழியங்களை (கொடுமைகள்) எதிர்கொண்டு வருகிறார்கள். தலித்கள், பழங்குடியினர்கள், பிற்படுத்தப்பட்டோர்கள், சிறுபான்மையினர்கள் பயங்கரமான பாகுபாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா ஆகியவற்றின் நோக்கத்தால் இந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை பெற வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் வெறுப்புணர்வை வளர்த்துள்ளனர். அனைத்து வகையிலான வளர்ச்சிக்கும், உரிமைகள் பறிக்கப்பட்டவர்களின் நீதிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் காங்கிரஸ் மற்றும் நான் எப்போதுமே போராடி வருகிறோம்.

    அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அர்ப்பணித்துள்ளது. அனைவருடைய சிறந்த எதிர்காலத்திற்காகவும், ஒன்றிணைந்து வலுவான மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை கட்டமைக்க காங்கிரஸ்க்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு சோனியா காந்தி அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

    • பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது.
    • அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம்.

    பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் தார் என்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

    அம்பேத்கரை காங்கிரஸ் குடும்பத்தினர் மிகவும் வெறுக்கின்றனர் என்பதுதான் உண்மை. பா.ஜனதா 400 இடங்களை பெற்றால், பிரதமர் மோடி அரசியலமைப்பை மாற்றிவிடுவார் என காங்கிரஸ் வதந்தியை பரப்பு வருகிறது.

    பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது. நாங்கள் அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம் என்பதை மக்கள் புரிந்து கொள்வது முக்கியமானது.

    காங்கிரஸ் மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வரக்கூடாது என்பதில் மோடி 400 இடங்களை விரும்புகிறார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பாப்ரி லாக் போட்டுவிடக்கூடாது என்பதற்காக மோடி 400 இடங்களை விரும்புகிறார்.

    ஓபிசி இடஒதுக்கீட்டை அவர்களது வாக்கு வங்கிக்கு அளிப்பதை தடுத்த மோடி 400 இடங்களை விரும்புகிறார். எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை கடந்த ஆண்டுகளாக நீட்டிக்க 400-க்கும் அதிகமான இடங்களை பயன்படுத்தியுள்ளோம். பழங்குடியின பெண்ணை நாட்டின் ஜனாதிபதியாக நியமனம் செய்ய, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பயன்படுத்தியுள்ளோம்.

    மோடி 400 இடங்களை கேட்பது நாட்டின் காலி இடங்களை, தீவுகளை மற்ற நாடுகளுக்கு காங்கிரஸ் அளித்து விடக்கூடாது என்பதற்காகத்தான். எஸ்.சி., எஸ்.டி, மற்றும் ஓபிசி-யின் இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு அவர்களுடைய வாக்கு வங்கிக்குக்கு அளிக்க முடியாது. வாக்கு வங்கியின் அனைத்து ஜாதிகளும் ஓபிசி என ஒரே இரவில் அறிவிக்க முடியாது.

    அரசியலமைப்பை உருவாக்குவதில் அம்பேத்கருக்கு பங்கு மிகக்குறைவு என்றும், அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் நேரு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தார் என்றும் காங்கிரஸ் கூறத் தொடங்கியது. அம்பேத்கரையும் அரசியல் சாசனத்தையும் முதுகில் குத்தியது காங்கிரஸ்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • குஜராத்தில் 25 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
    • பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார்.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாளை 3-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ளன. சூரத் தொகுதியில் முகுஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் அங்கு தேர்தல் நடத்தப்படாது. மற்ற 25 தொகுதிகளில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    மோடி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய இருக்கிறார்.

    இந்த பள்ளியில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நேற்று அகமதாபாத்தில் வாக்கிற்காக ஓட்டம் என்ற பெயரில் மாரத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பதற்கான வழிப்புணர்வு ஓட்டமாக இந்த மாரத்தான் நடத்தப்பட்டது.

    2014 மற்றும் 2019-ல் பா.ஜனதா 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தற்போது முழுமையாக கைப்பற்றும் நம்பிக்கையில் உள்ளது.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 24 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    • அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது.
    • கையில் 55 ஆயிரம் ரூபாய் உள்ளது.

    உத்தரப் பிரதேசம் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று காலை வெளியிட்டார். ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் உடன் இருந்தனர்.

    ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், தனக்கு ரூ.20 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார்.

    பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் பின் வருமாறு:-

    1. அசையும் சொத்துக்களின் மதிப்பு 9.24 கோடி ரூபாய் ஆகும்.

    2. அசையா சொத்துக்களின் மதிப்பு 11.15 கோடி ரூபாய் ஆகும்.

    3. சொந்த வாகனம் கிடையாது.

    4. அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது.

    5. கையில் 55 ஆயிரம் ரூபாய் உள்ளது.

    6. வங்கியில் 26.25 லட்சம் ரூபாய் டெபாசிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

    7. 4.33 கோடி ரூபாய் மதிப்பில் பத்திரங்கள் மற்றும் பங்குகள் உள்ளன.

    8. 3.81 கோடி ரூபாய் மதிப்பில் மியூட்சுவல் நிதி உள்ளது.

    9. 15.21 லட்சம் ரூபாய் மதிப்பில் கோல்டு பத்திரம் உள்ளது.

    10. 4.20 லட்சம் ரூபாய் அளவில் நகைகள் உள்ளன.

    11. 9 கோடி ரூபாய் மதிப்பில் குருகிராமில் சொந்த அலுவலகம் உள்ளது.

    12. தனது சகோதரியுடன் இணைந்து விவசாய நிலம் உள்ளது.

    இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

    • பாஜக-வுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடைக்காது.
    • தெற்கில் 2019-ஐ விட மிகவும் மோசமான முடிவுதான் பா.ஜனதாவுக்கு கிடைக்கும்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசி தரூர் போட்டியிட்டுள்ளார். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கிறார்.

    இவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    பா.ஜனதா சொல்லும் 400 இலக்கு என்பது ஜோக். 300 என்பது சாத்தியமற்றது. 200 என்பது கூட அந்த கட்சிக்கு சவாலானதாக இருக்கும்.

    கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடைக்காது. தெற்கில் 2019-ஐ விட மிகவும் மோசமான முடிவுதான் பா.ஜனதாவுக்கு கிடைக்கும். கடந்த மாதம் 26-ந்தேதி வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மூலம் 190 இடங்களில் தேர்தல் முடிந்துள்ளது. என்னுடைய தரவுகள்படி, எங்கள் கூட்டணிக்கு மிகப்பெரிய அளவில் நேர்மறையாக முடிவு கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மிகப்பெரிய அலையாக இருக்கும் என நாங்கள் கூறவில்லை. ஆனால், அரசாங்கத்திற்கு ஆதரவாக இல்லை. தற்போது வரை நாங்கள் முன்னணியில் உள்ளோம். தேவையில்லாத இந்த நீண்ட கால தேர்தலில் இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூர் வெற்றி பெற்றால், இந்த தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவர் என்ற பெருமையையும், நீண்ட காலம் இந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் என்ற பெருமையையும் பெறுவார்.

    ×