என் மலர்
னந்த் முருகன் மதுரையையே ஆட்டிப்படைக்கும் பிரபல ரவுடியின் சிஷ்யனாக இருக்கிறார்.பின்னர், ஆனந்த் முருகன் குருவின் இடத்தை பிடித்து மதுரையில் மேலோங்கி நிற்கிறார்.
ஆனந்த் முருகனை கதையின் நாயகன பாலஹாசன் தனது நண்பர்ளுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிடுகிறார். இவர், அப்பா, அம்மா, மனைவி, குழந்தை என குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் ஆனந்த் முருகனை கொலை செய்ய திட்டிமிடுகிறார்.
பாலஹாசன், மதுரையின் மிகப்பெரிய சக்தியாக திகழும் ரவுடி ஆனந்த் முருகனை கொலை செய்ய முயற்சிப்பது ஏன் ? அவரது முயற்சி வெற்றி பெற்றதா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதிகதை.
நடிகர்கள்
அறிமுக நடிகர் ஆனந்த் முருகன் ரவுடி கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறார்.மிக நேர்த்தியாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாலஹாசன், படத்திற்கு படம் கதாபாத்திரங்களில் வித்தியாசத்தை காட்டுவதோடு, தனது நடிப்பிலும் வேறுபாட்டை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்கிறார்.
சீரியல் நாயகன் ஸ்ரீதேவா, யாசர், விஜே ஆண்ட்ரூஸ் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திருக்கிறார்கள்.
நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, சோசியல் மீடியா மோகத்தினால் வாழ்க்கையை தொலைக்கும் பெண்களை எச்சரிக்கும் விதமாக நடித்திருக்கிறார்.
இயக்கம்
மதுரையை ஆட்டிப்டைக்கும் அசாதாரண மனிதன் ஒருவனை சாதாரணமான ஒருவன் வீழ்த்த முடிவு செய்வதும், அந்த முடிவை செயல்படுத்த போராடுவதையும் விறுவிறுப்பாக காட்டியிருகிறார். படத்தில் ஆங்கங்கே தொய்வும் இருக்கிறது. கதை ஓட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலம்.
இசை
ரகு நந்தனின் இசையில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் கேட்கும் ரகம். ஜோஸ் ஃபிராங்கிளினின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதைக்கு பலம்.
ஒளிப்பதிவு
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் குகநேசன் சோனைமுத்து, பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்துவிடுகிறார்.
ரேட்டிங்- 2/5
- கணவன்- மனைவி இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவின.
- திடீரென உங்களுக்கு எல்லாமே தவறாகப் போகும்.
தமிழ் சினிமாவில் காதலை வித்தியாசமான கோணத்தில் சொன்னவர், இயக்குனர் செல்வராகவன். 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். அதோடு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். இவர், தற்போது '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தை இயக்கி வருகிறார். இவர் ஆரம்பத்தில் தன் படங்களில் நடித்த சோனியா அகர்வாலை திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. இதையடுத்து செல்வராகவன், கீதாஞ்சலி என்பவரை மணந்துகொண்டார்.
சமீபத்தில் அவரது மனைவி கீதாஞ்சலி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள செல்வராகவனுடனான புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியதாக கூறப்பட்டது. இதனால் கணவன்- மனைவி இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவின.
இந்த நிலையில் செல்வராகவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில்,''திடீரென உங்களுக்கு எல்லாமே தவறாகப் போகும். சுற்றியுள்ள அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். 'நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டிருப்பேன்' என்று பிதற்றுவீர்கள். அதுபோன்ற நேரங்களில் அமைதியாக இருங்கள். சில காலத்தில் பெரும் மலை, பனியாய் போகும். அனைத்தும் சரியாகிவிடும்" என்று கூறியுள்ளார்.
இந்தப் பதிவின் மூலம், செல்வராகவனின் குடும்பத்தில் ஏதோ ஒரு பிரச்சனை நடந்திருப்பது உறுதியாகி உள்ளது. அதைத்தான் இந்தப் பதிவின் மூலம் அவர் சொல்லியிருக்கிறார் என்று பலரும் பின்னூட்டம் செய்து வருகிறார்கள்.
- ஆந்திராவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஆம்னி.
- கமல்ஹாசன், மம்முட்டி, விஜயகாந்துடன் ஜோடியாக நடித்துள்ளார்.
ஐதராபாத்:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஆம்னி. (52). இவர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த நாகர்ஜுனா, பாலகிருஷ்ணா, ஜெகபதி பாபு உள்பட பலருடன் நடித்துள்ளார். இவர் கமல்ஹாசனுடனும் நடித்துள்ளார்.
தமிழிலும் தங்கமான தங்கச்சி, ஆனஸ்ட்ராஜ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர் காஜா மொய்தீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1992-ல் வெளியான முதல் சீதனம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் ராமசந்திர ராவ் முன்னிலையில் நடிகை ஆம்னி பா.ஜ.க.வில் இணைந்தார். அவருடன் பிரபல மேக் அப் ஆர்டிஸ்ட் சோபா லதாவும் பா.ஜ.க.வில் இணைந்தார்.
- பராசக்தி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.
- பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
சிவகார்த்திகேயன் வந்த கார், முன்னால் சென்ற கார் மீது லேசாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து தொடர்பாக இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீசார் சமரசம் பேசி உள்ளனர். இது தொடர்பாக மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அரசன்'. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது, ரேஸிங் களத்தில் அஜித்குமாருடன் சிம்பு எடுத்த புகைப்படத்தை பிரேம் செய்து சிம்புவிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்கினர்.
அண்மையில் மலேசியா சென்ற சிம்பு அங்கு ரேஸிங் களத்தில் அஜித்குமாரை சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 70 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள். அப்படி, கடந்த சில வாரங்களாக பிரவீன் காந்தி, நந்தினி, அரோரா சி.ஜே., ஆதிரை, துஷார், பிரவீன் காந்தி, திவாகர், கெமி, பிரஜின், ரம்யா ஜோ ஆகியோர் வெளியேறினார்கள்.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சாண்ட்ரா வெளியேறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் வோட்டிங் அடிப்படையில் FJ மற்றும் ஆதிரை கடைசி இடங்களில் உள்ளதால் இவர்கள் இருவரும் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
- ஹாப்பி ராஜ் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார்.
- ஹாப்பி ராஜ் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹேப்பி ராஜ் படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
- சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி’ இயக்குகிறார்
- இந்த பாடலுக்கு வரிகள் எழுதி விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
சென்னை:
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். தற்போது இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி' என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி' இயக்குகிறார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
2கே தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் "லவ் அட்வைஸ்" என்ற பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்திருந்த நிலையில் பாடல் வெளியானது. இந்த பாடலுக்கு வரிகள் எழுதி விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 3. 2012ம் ஆண்டில் தமிழில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படம் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழி மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது.
தமிழை போலவே, 3 திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடையும் நல்ல வரவேற்பை பெற்றது.
இது ஒரு காதல் உளவியல் த்ரில்லர் திரைப்படம், இதில் தனுஷ் இருமுனை கோளாறால் (bipolar disorder) பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார். அனிருத் இசையில், பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்தது.
'3' திரைப்படம் ஏற்கனவே 2022 (தெலுங்கு மாநிலங்களில்) மற்றும் செப்டம்பர் 2024 (தமிழகத்தில்) ஆகிய ஆண்டுகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
பொதுவாக ஒரு படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 1-2 ஆண்டுகளுக்குள் மீண்டும் பெரிய அளவில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது அரிது. இந்நிலையில், 3 திரைப்படம் தெலுங்கு மொழியில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
அதன்படி, பிப்ரவரி 6ம் தேதி அன்று உலகம் முழுவதும் தெலுங்கு மொழியில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இன்னும் 50 நாட்களில் 3 திரைப்படம் ரீ ரிலீஸ் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- இதுவரை இந்த சீரீஸ்-இல் 10 படங்கள் வெளியாகி உள்ளன.
- 11வது மற்றும் கடைசி பாகமான ஃபாஸ்ட் எக்ஸ்: 2 படம் தற்போது உருவாகி வருகிறது.
ஹாலிவுட்டில் கார் ரேஸிங்கை வைத்து இயக்கப்பட்ட பிரபலமான திரைப்பட சீரீஸ் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்.
இதுவரை இந்த சீரீஸ்-இல் 10 படங்கள் வெளியாகி உள்ளன. இதற்கென உலகெங்கிலும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இதன் 11வது மற்றும் கடைசி பாகமான ஃபாஸ்ட் எக்ஸ்: 2 படம் தற்போது உருவாகி வருகிறது. 2027 ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த கடைசி பாகத்தில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியோனா ரொனால்டோ இணைந்துள்ளார். இதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பு தலத்தில் ரொனால்டோ இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

படத்தில் ரொனால்டோ முக்கியபாத்திரம் ஒன்றில் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. எனவே ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ரசிகர்கள், ரொனால்டோ ரசிகர்கள் என இருவர் மத்தியிலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- எரிமலைக் குழம்புகளும், போர்க்களக் காட்சிகளும் மெய்சிலிர்ப்பு ரகம்.
- அவரது குத்தும் பார்வையும் கூர்மையான உடல்மொழியும் திரையை ஆட்கொள்கிறது.
டைட்டானிக் மூலம் உலகப் புகழ் பெற்றவர் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் காம்ரூன்.
தனது படங்களில் பிரமாண்டத்திற்காக அறியப்படும் கேமரூன் 2009 இல் ஒரு படத்தை இயக்கி வெளியிடுகிறார். அதுதான் 'அவதார்'.
ஒரு திரைப்படத்தில் இவ்வளவு பிரமாண்டத்தை அதுவரை யாரும் பார்த்ததே இல்லை என்ற அளவுக்கு அவ்வளவு நுட்பமான காட்சி அமைப்புகள், நவீன VFXகள் என அப்படம் அமைந்தது.
2154 ஆம் ஆண்டில் பண்டோரா எனும் கிரகத்தில் வசிக்கும் நவி இன மக்களைப் பற்றி ஆராய சென்று அவர்களில் ஒருவனாக மாறும் ஹீரோ ஜேக் சல்லி, அவர்களுக்காக தனது சொந்த மனித இனத்தையே எதிர்த்து போராடுவதாக படம் அமைந்திருந்தது.நெய்த்திரி என்ற நவி பெண்ணின் மீதான ஜேக் சல்லியின் காதலே இப்படத்தை நகர்த்தும் அச்சாணி.

இப்படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு பெரும் வெற்றியை பெற்று கிளாசிக் ஆனது. தொடர்ந்து கடந்த 2022 இல் அவதார் 2 ஆம் பாகமான தி வே ஆப் வாட்டர் வெளியானது.
இது முதல் பாகம் அளவு கொண்டாடப்படவில்லை எனினும் முதலாமதை போலவே அதன் பிரமாண்ட காட்சிகளுக்காக போற்றப்பட்டது.
இந்நிலையில் அவதார் சீரிஸ் உடைய கடைசி பாகமான ஃபயர் அண்ட் ஆஷ் கடந்த 18 ஆம் தேதி வெளியாகி உள்ளது.
கதை:
முதல் பாகத்தில் காடு, இரண்டாம் பாகத்தில் கடல் என நம்மை வியக்க வைத்த கேமரூன், இந்த மூன்றாம் பாகத்தில் பண்டோரா கிரகத்தின் எரிமலைப் பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.
அங்கு வசிக்கும் 'மாங்குவான்' எனப்படும் புதிய நவி இன மக்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் மற்ற நவி இனத்தவரைப் போல அமைதியானவர்கள் அல்ல.
மாறாக வன்முறையும், பொறாமையும் கொண்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள். இவர்களே சாம்பல் மக்கள் (Ash people) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் தலைவி வராங் இந்த பாகத்தின் முக்கிய வில்லி ஆவார்.
இந்த பாகத்தில், ஜேக் சல்லி மற்றும் நெய்த்திரி தங்கள் குழந்தைகளைக் காக்கவும், மனிதர்களின் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் மீண்டும் போராடுகிறார்கள்.

இவர்களுக்கு எதிராக மனிதர்களும், சாம்பல் மக்களும் கைகோர்ப்பது ஜேக்கின் குடும்பத்திற்குப் பெரும் சவாலாக அமைகிறது.
இந்த சவாலை அவர்கள் முறியடித்தனரா என்பதே படத்தின் கதை. படத்தின் முதல் ஒரு மணி நேரம் கதை நகராமல் மிகவும் மெதுவாகச் செல்வது பலவீனமாகக் கருதப்படுகிறது. இரண்டாம் பாதியில் குடும்ப சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக உள்ளன.

காட்சி அமைப்பு:
படத்தின் மிகப்பெரிய பலமே அதன் VFX மற்றும் 3D தொழில்நுட்பம்தான். ஒவ்வொரு காட்சியும் மெனக்கிட்டு செதுக்கப்பட்டுள்ளது. எரிமலைக் குழம்புகளும், போர்க்களக் காட்சிகளும் மெய்சிலிர்ப்பு ரகம்.
மலைக்க வைக்கும் அளவு, 3 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடும் வகையில், வழக்கமான கதைக்களத்தை வடிகட்டிய எடுத்த அவதார் 3, அதன் காட்சி பிரமாண்டத்திற்காக மட்டுமே வொர்த் என்று கூறமுடியும். இந்தப் படத்தை பெரிய திரையில் பார்த்தால் மட்டுமே அதன் முழுமையான அனுபவத்தைப் பெற முடியும்.

நடிகர்கள்:
ஹீரோ ஜேக் சல்லியாக சாம் வொர்திங்டன் தந்தையாகவும், தலைவனாகவும் முதல் 2 பாகத்தை விட முதிர்ச்சி காட்டி உள்ளார். நெய்த்திரியாக நடித்த ஜோ சால்டனா அன்பிலும் ஆக்ஷனிலும் சமமாக ஆதிக்கம் செலுத்துகிறார்.
நெருப்பு உலகத்தின் சாம்பல் மனிதர்களின் தலைவியாக வரும் வில்லி வராங் கதாபாத்திரத்தில் ஷ்பானிஷ் நடிகை ஊனா சாப்ளின் சொல்லி அடித்திருக்கிறார். அவரது குத்தும் பார்வையும் கூர்மையான உடல்மொழியும் திரையை ஆட்கொள்கிறது.
பின்னணி இசை:
இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்த சைமன் ஃப்ரான்ங்க்லென் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
சாம்பல் இன மக்கள் வரும் காட்சிகளில், ஆக்ஷன் காட்சிகளில் வரும் இசை ஈர்க்கிறது. குடும்ப சென்டிமென்ட்டிலும் இசையை பிழிந்திருக்கிறார் சைமன்!
ஒட்டுமொத்தமாக அவதார் 3 ஒரு அருமையான காட்சி அனுபவம், கணிக்கக்கூடிய கதை அனுபவம். மொத்தத்தில் அவதார் 3 அறிவை விட புலன்களுக்கு ஒரு விருந்து.
மாலைமலர் ரேட்டிங் : 3 / 5
- விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.
- இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.
2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இன்ஸ்பக்டர் விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். ஒரு கடத்தல்காரனை தப்பிக்க விட்டதற்காக அவரை ச்ஸ்பண்ட் செய்து விடுவார்கள். அப்பொழுது அவர் ஒரு கும்பலை சந்திக்கிறார். அவர்கள் 500 கோடி ரூபாய் பணத்தொகையை கடத்த திட்டம் போடுகிறார்கள். அதற்கு அஜித் உதவுவதாக கூறுவார் அதற்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதைக்களம்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும். படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.
இந்நிலையில், மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய பட்க்குழு திட்டமிட்டுள்ளனர். ஜனவரி மாதம் 23 ஆம் தேதி படம் ரீரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதுமாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் கிங்மேக்கர் என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.








