என் மலர்
- ஆங்கிலம் அல்லாத பிறமொழிகள் படத்தில் The Secret Agent விருதை வென்றது.
- இந்தியப் பிரபலங்களில், பிரியங்கா சோப்ரா மட்டுமே கலந்துகொண்டார்
ஆஸ்கார் விருதுகளுக்கு அடுத்தப்படியான முக்கிய விருதுகளில் ஒன்று கோல்டன் குளோப் விருதுகள். சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷனால் வழங்கப்பட்டு வரும் விருதுவிழா இந்த ஆண்டு அதன் 83 வது பதிப்பை எட்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களைக் கௌரவிக்கும் இந்த விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் திரைப்படங்களுக்கான 14 விருதுகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான 13 விருதுகள் அடங்கும். மேலும் முதல் முறையாக சிறந்த பாட்காஸ்ட் விருது அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் "One Battle After Another" படம் அதிக விருதுகளை தட்டிச்சென்றது. "Adolescence" தொலைக்காட்சி பிரிவில் நான்கு விருதுகளை வென்றது, மேலும் "Hamnet" மற்றும் "Sinners" ஆகிய திரைப்படங்கள் தலா இரண்டு விருதுகளைப் பெற்றன. Hamnet சிறந்த திரைப்பட விருதைப் பெற்றது. ஆங்கிலம் அல்லாத பிறமொழிகள் படத்தில் The Secret Agent விருதை வென்றது. Sinners சிறந்த வசூல் சாதனையில் விருதுபெற்றது. சிறந்த அனிமேஷன் பிரிவில் KPop Demon Hunters விருதை வென்றது. சிறந்த இயக்குநர் விருதை பால் தாமஸ் ஆண்டர்சன் பெற்றறார். இந்த விருதுவிழாவில் இந்தியப் பிரபலங்களில், பிரியங்கா சோப்ரா மட்டுமே கலந்துகொண்டார்.
- மூன்வாக்' படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார்
- அடுத்தாண்டு கோடை விடுமுறையில் மூன்வாக் படம் வெளியாகவுள்ளது.
சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடனப் புயல்- இசைப்புயல் இணைந்துள்ள படம் 'மூன்வாக்'. அதாவது பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ள இப்படத்தை என்.எஸ்.மனோஜ் இயக்கி உள்ளார்.
'மூன்வாக்' என்பது 'பாப்' இசை உலகின் மன்னர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும். இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.
இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப பொழுதுபோக்காக, நகைச்சுவை கலந்து உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு உரிமையை 'லஹரி மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மூன்வாக் படத்தின் இடம்பெற்றுள்ள 5 பாடல்களும் நாளை (ஜனவரி 13) மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களின் முதல் 1 நிமிட இடம்பெற்ற மினி கேசட் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. 'மூன்வாக்' படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியான படம் 'துரந்தர்'.
- துரந்தர் படம் வெளியாகி இன்றுடன் 39 நாட்கள் ஆகிறது.
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியான படம் 'துரந்தர்'. இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், படம் வெளியாகி இன்றுடன் 39 நாட்கள் ஆன நிலையில், துரந்தர் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி, துரந்தர் இன்றுடன் உலகளவில் ரூ.1296 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மேலும், இந்தியளவில் ரூ.1011.73 கோடியும், மற்ற நாடுகளில் ரூ.284.10 கோடியும் வசூலாகியுள்ளது.
- 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை
- 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
இதற்கிடையில் பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியுள்ளது.
- அண்மையில் நடிகர் விஜய்யின் பெயரைக்கூறி, சிறுவர் ஒருவர் மோசடியில் ஈடுப்பட்டிருந்தார்
- கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நடிகர் கமல்ஹாசன் தனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் 'உலகநாயகன்' என்ற பட்டத்தையும் அனுமதி இல்லாமல் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
'நீயே விடை' என்ற நிறுவனம் அனுமதியின்றி கமலின் புகைப்படங்களையும், வசனங்களையும் டி-சர்ட்டுகளில் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார். சிறுவயதிலிருந்தே திரையுலகில் இருந்து வருவதாகவும், பல்வேறு கலை வடிவங்களில் தனக்கிருக்கும் நிபுணத்துவத்தின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சமீப நாட்களாகவே பிரபல நடிகர், நடிகைகளின் பெயரைப் பயன்படுத்தி, சில நிறுவனங்கள் உரிய அனுமதி இன்றி தங்களது உற்பத்தி பொருட்களை விளம்பரம் செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகிறது. அண்மையில் கூட நடிகர் விஜய்யின் பெயரைக்கூறி, சிறுவர் ஒருவர் மோசடியில் ஈடுப்பட்டிருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் தொடங்கி அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகர் மாதவன் என பல பிரபலங்களும் நீதிமன்றத்தை நாடி உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 15-ந்தேதி பொங்கலன்று வெளியாகிறது.
- நேற்று 'தலைவர் தம்பி தலைமையில்' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இப்படத்தை இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 30-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், வருகிற 15-ந்தேதி பொங்கலன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விஜயின் ஜனா நாயகன் படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையாக நேற்று வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வருகிற 21-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில்தான் ஜீவா படம் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று தலைவர் தம்பி தலைமையில்' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஜீவா, "நான்தான் சென்சார் போர்டின் பிராண்ட் அம்பாசிடர். ஜிப்ஸி திரைப்படத்தில் 48 கட்கள் கொடுத்தனர். என்னைதான் சென்சார் போர்டு முதலில் செய்தார்கள் அவர்களோடு சேர்த்து கொரோனாவும் என்னை செய்தது" என்று கிண்டலாக தெரிவித்தார்.
- 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரெய்லரின் பல காட்சிகள் பகவந்த் கேசரி படத்துடன் ஒத்துப்போனது.
- பகவந்த் கேசரி Amazon Prime OTT தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்து அசத்தியது.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்' ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரெய்லரின் பல காட்சிகள் பகவந்த் கேசரி படத்துடன் ஒத்துப்போனது. இதனையடுத்து 'ஜனநாயகன்' படம் சுமார் 80% 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் எனும் கருத்து சமூக வலைதளங்களில் வைரலானது
இதனால் பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் மாபெரும் வெற்றியை பெற்ற பகவந்த் கேசரி Amazon Prime OTT தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்து அசத்தியது.
இந்நிலையில், 'பகவந்த் கேசரி' படத்தின் அடிப்படை கருவை மட்டும் வைத்துக்கொண்டு `ஜனநாயகன்' படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று 'பகவந்த் கேசரி' இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொடுத்த நேர்காணலில் பேசிய அனில் ரவிபுடி, "'பகவந்த் கேசரி' படத்தின் முதல் 20 நிமிடங்கள், இடைவேளை மற்றும் இரண்டாம் பாதியின் சில பகுதிகள் என சில விஷயங்கள் மட்டுமே ஜன நாயகன் படத்தில் அப்படியே இருக்கும். மற்றபடி வில்லன் கதாபாத்திரத்தை முழுமையாக மாற்றி, ரோபோ மற்றும் Sci-Fi அம்சங்களைச் சேர்த்துள்ளனர். தமிழ் ரசிகர்களுக்கு அது கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
- அண்மையில் நடிகர் விஜய்யின் பெயரைக்கூறி, சிறுவர் ஒருவர் மோசடியில் ஈடுப்பட்டிருந்தார்
- வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
நடிகர் கமல்ஹாசன் தனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் 'உலகநாயகன்' என்ற பட்டத்தையும் அனுமதி இல்லாமல் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கையும், இடைக்காலத் தடையுத்தரவு கோரும் அவரது மனுவையும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி நாளை (ஜனவரி 12, ) விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'நீயே விடை' என்ற நிறுவனம் அனுமதியின்றி கமலின் புகைப்படங்களையும், வசனங்களையும் டி-சர்ட்டுகளில் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார். சிறுவயதிலிருந்தே திரையுலகில் இருந்து வருவதாகவும், பல்வேறு கலை வடிவங்களில் தனக்கிருக்கும் நிபுணத்துவத்தின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சமீப நாட்களாகவே பிரபல நடிகர், நடிகைகளின் பெயரைப் பயன்படுத்தி, சில நிறுவனங்கள் உரிய அனுமதி இன்றி தங்களது உற்பத்தி பொருட்களை விளம்பரம் செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகிறது. அண்மையில் கூட நடிகர் விஜய்யின் பெயரைக்கூறி, சிறுவர் ஒருவர் மோசடியில் ஈடுப்பட்டிருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் தொடங்கி அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகர் மாதவன் என பல பிரபலங்களும் நீதிமன்றத்தை நாடி உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரையரங்குகள் முன்பு குவிந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் பேனருக்கு பாலாபிஷேகம், இனிப்பு, பட்டாசு வெடித்து கொண்டாடினர். 'பராசக்தி' படத்தை பார்க்க அப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் மற்ற நடிகர்கள் திரையரங்குகளில் குவிந்ததால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
முன்னதாக 'பராசக்தி' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், நேற்று உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியானது.
இந்நிலையில், பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது.
- ரவி மோகனின் வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளது
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. இப்படத்தில் ரவி மோகனின் வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பராசக்தி படத்தின் ப்ரோமோஷனுக்காக ரவி மோகன் கொடுத்த நேர்காணல் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
cute ஆக நீங்க செய்யும் மூட நம்பிக்கை எது என்ற கேள்விக்கு பதில் அளித்த ரவி மோகன், " என் நண்பன் ஞாயிற்றுக்கிழமைகளில் சிவப்பு நிற உடை அணிய வேண்டும் என்று என்னிடம் கூறினான். அதை இன்று வரை செய்து வருகிறேன் என்று கூறினார். அதற்கு படப்பிடிப்பில் எப்படி இது சாத்தியமாகும் என்று கேள்விக்கு அப்போது சிவப்பு நிற உள்ளாடை அணிவேன் என்று ரவி மோகன் கூறியது இணையத்தி ட்ரெண்டானது.
மேலும், சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் cute ஆன வசனங்களை ரவி மோகன் recreate செய்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது
- அரசியல் நஞ்சு, வகுப்புவாத விஷம், தனிநபர் அவதூறுகள், விவாதங்களால் நிறைந்துள்ளது.
- தணிக்கை வாரியம் இப்போது உண்மையில் செய்வது பாதுகாப்பு அல்ல, வெறும் நாடகம்தான். இது ஒரு அதிகாரச் சடங்கு.
தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததால் விஜய்யின் ஜனநாயகன் படம் ஜனவரி 9 அன்று வெளியாகாமல் போனது. இந்த வழக்கு குறித்த விசாரணையை உயர்நீதிமன்றம் ஜான்வாரி 21 க்கு தள்ளி வைத்ததால் படம் பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. விஜய்க்கு ஆதரவாக தணிக்கை வாரியத்துக்கு எதிராக பல சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நடிகர் விஜய் அவர்களின் ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைப் பிரச்சனைகள் என்ற சூழலில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தணிக்கை வாரியம் இன்றும் பொருத்தமானதாக இருக்கிறது என்று நினைப்பது உண்மையிலேயே முட்டாள்தனமானது.
அதன் நோக்கம் எப்போதோ முடிந்துவிட்டது, ஆனால் அதன் தற்போதைய பொருத்தத்தைப் பற்றி விவாதிப்பதில் உள்ள சோம்பேறித்தனத்தால் அது இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.
நாம் வாழும் காலத்தில், ஒரு செல்போன் வைத்திருக்கும் 12 வயதுச் சிறுவனால் செல்போனில் படமாக்கப்பட்ட ஒரு பயங்கரவாதியின் மரணதண்டனையைப் பார்க்க முடிகிறது.
ஒரு 9 வயதுச் சிறுவன் தற்செயலாக ஆபாசப் படங்களைப் பார்க்க நேரிடுகிறது. இவை அனைத்தும் உடனடியாக, அநாமதேயமாக, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்கின்றன.
அதே நேரத்தில், செய்தி சேனல்கள் முதல் யூடியூபர்கள் வரை, மற்ற செயலிகள் வரை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஆபாசமான மொழியில் பேசுகிறார்கள்.
சினிமா ஒரு சக்திவாய்ந்த ஊடகம் என்ற அந்தக் கால நம்பிக்கையை நீங்கள் மேற்கோள் காட்டினால், சமூக ஊடகங்களுக்கு சினிமாவை விட அதிக சென்றடைதல் சக்தி உள்ளது என்ற உண்மையைப் புறக்கணிக்காதீர்கள்.
அது அரசியல் நஞ்சு, வகுப்புவாத விஷம், தனிநபர் அவதூறுகள், விவாதங்கள் என்ற பெயரில் நேரலையில், தணிக்கையற்ற கூச்சல் சண்டைகள் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது.
இந்த யதார்த்தத்தில், ஒரு திரைப்படத்தில் ஒரு வார்த்தையை நீக்குவது, ஒரு காட்சியைத் திருத்துவது அல்லது சிகரெட்டை மங்கலாக்குவது ஆகியவை சமூகத்தைப் பாதுகாக்கும் என்று தணிக்கை வாரியம் நம்புவது ஒரு கேலிக்கூத்து.
தணிக்கை வாரியம், படங்கள் அரிதாக இருந்த; அணுகல் குறைவாக இருந்த; அரசு, ஊடகங்களைக் கட்டுப்படுத்திய ஒரு காலத்தில் பிறந்தது.
திரையரங்குகள் மக்கள் கூடும் இடங்களாக இருந்தன. செய்தித்தாள்களுக்கு ஆசிரியர்கள் இருந்தனர். தொலைக்காட்சிகளுக்கு நிகழ்ச்சி நிரல்கள் இருந்தன. அப்போது கட்டுப்பாடு என்பது அர்த்தமுள்ளதாக இருந்தது.
ஆனால் இன்று, எந்த விதமான கட்டுப்பாடும் சாத்தியமற்றது, ஏனென்றால் மக்கள் எதைப் பார்க்க வேண்டும் அல்லது பார்க்கக்கூடாது என்பதை இனி யாராலும் தீர்மானிக்க முடியாது.
இன்றைய காலகட்டத்தில், தணிக்கை என்பது வெளிப்பாட்டைத் தடுப்பதில்லை. அது பார்வையாளர்களை அவமதிப்பது மட்டுமே.
நம்மை யார் ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் புத்திசாலித்தனம் நமக்கு இருக்கிறது, ஆனால் நாம் எதைப் பார்க்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் புத்திசாலித்தனம் இல்லையா?
தணிக்கை வாரியம் இப்போது உண்மையில் செய்வது பாதுகாப்பு அல்ல, வெறும் நாடகம்தான். இது ஒரு அதிகாரச் சடங்கு.
அங்கு கத்தரிக்கோல் சிந்தனைக்கு மாற்றாகிறது, மேலும் தார்மீகப் பொறுப்பு என்ற பாசாங்கு போர்வையில் வலம் வருகிறது.
சமூக ஊடகங்களில் வன்முறைக் காட்சிகளைத் தாராளமாகப் பார்க்கும் அதே சமூகம், ஒரு திரைப்படம் திரையரங்கில் அதைக் காட்டும்போது திடீரென்று கவலை கொள்கிறது.
இந்த இரட்டை வேடம் ஆபத்தானது.தணிக்கை என்பது மக்கள் என்றென்றும் குழந்தைகளாகவே இருப்பார்கள் என்று கருதுகிறது.
சினிமா என்பது பாடங்கள் கற்பிக்கப்படும் ஒரு வகுப்பறை அல்ல. அவை பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட கண்ணாடிகள் மற்றும் கருத்துக்கள்.
அவற்றைத் திருத்துவதோ அல்லது வெட்டி நீக்குவதோ அதிகாரிகளின் வேலை அல்ல, மாறாக குடிமக்கள் தாங்களாகவே முடிவு செய்வார்கள் என்று அவர்களை நம்புவதுதான் அவர்களின் வேலை.
இதுவே அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் முக்கிய அம்சமாகும்.
உலகம் ஏற்கனவே தணிகையில்லாத மற்றும் மேற்பார்வையற்ற பல தளங்களுக்கு நகர்ந்துவிட்டது.
எனவே, தாங்கள் காலாவதியாகிவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்ள அதிகாரிகளுக்குத் துணிச்சல் இருக்கிறதா, அதைவிட முக்கியமாக, ஒரு திரைப்படத் துறையாகிய நாம் கூட்டாக அவர்களைக் கேள்வி கேட்கும் மன உறுதி நமக்கு இருக்கிறதா என்பதுதான் வேதனையான கேள்வி.
எனவே, ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தின்போது மட்டும் இந்தத் விஷயத்தை அவ்வப்போது எழுப்புவதற்குப் பதிலாக, தணிக்கை வாரியத்தை உருவாக்கிய அந்த குறிப்பிட்ட சிந்தனை அமைப்புடன் தான் போராட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி இவர் எடுத்த படங்கள் பிரசித்தம்.
- ஓம்காரா(ஒதெல்லோ நாடகம்), மகபூல் (மாக்பெத் நாடகம்), ஹைதர்(ஹாம்லெட் நாடகம்) ஆகிய படங்கள் கிளாசிக் ரகம்.
இந்தியில் முன்னணி இயக்குநர் விஷால் பரத்வாஜ். ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி இவர் எடுத்த படங்கள் பிரசித்தம். ஓம்காரா(ஒதெல்லோ நாடகம்), மகபூல் (மாக்பெத் நாடகம்), ஹைதர்(ஹாம்லெட் நாடகம்) ஆகிய படங்கள் கிளாசிக் ரகம்.
இவர் தற்போது ஓ' ரோமியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது ரோமியோ ஜூலியட் நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹைதர் படத்தில் நடித்த ஷாஹித் கபூர் மீண்டும் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக திரிப்தி திம்ரி நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் நானா படேகர், பரிதா ஜலால் , அவினாஷ் திவாரி, விக்ராந்த் மாஸ்ஸி, திஷா பதானி மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி உள்ள இதன் டீசர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் பிப்ரவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.








