என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • தனுஷின் 3 படம் நல்ல வரவேற்பைப் பெற்றது
    • நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

    இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அப்படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து 'வை ரா வை' படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனைத்தொடர்ந்து தன்னுடைய தந்தை ரஜினிகாந்தை வைத்து 'லால் சலாம்' என்ற திரைப்படத்தை இயக்கினார். இதுவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், தற்போது புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

     கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 9வது படத்தை இயக்குகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகவில்லை. நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.


    • கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்ததன்மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக மாறியவர்கள்
    • இரண்டு முறை திருமணம் நடைபெற்றுள்ளது.

    கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்ததன்மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக மாறியவர்கள் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா. இப்படங்களில் இருந்து இருவரும் காதலிப்பதாக நீண்டநாட்களாக, வருடங்களாக பல கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் எவற்றிற்கும் பதிலளிக்காமல் அமைதியாகவே நட்பை தொடர்ந்தது இந்த ஜோடி. 

    இந்நிலையில் ஜனவரி தொடக்கத்திலிருந்தே இவர்களின் திருமணம் தொடர்பான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த அறிவிப்பை, ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் 'விரோஷ்' என்ற பெயரிலேயே அறிவித்தனர். 

    இந்நிலையில் இன்று இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஐடிசி மெமென்டோஸ் ஆடம்பர ஹோட்டலில் நடைபெற்றது. விஜய் தேவரகொண்டா ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால் காலை 10:10 மணிக்கு தெலுங்கு பாரம்பரியப்படியும், ராஷ்மிகா கர்நாடகாவின் குடகு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் மாலை 4:30 மணிக்கு அவரது குடும்ப முறைப்படி கொடவா பாரம்பரியப்படியும் என இருமுறை திருமணச் சடங்குகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் தம்பதியினருக்குக் கடிதம் மூலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆனால் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தம்பதியினர் தற்போது அதிகாரப்பூர்வமாக தங்களது திருமணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    புகைப்படங்களை பகிர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய்,

    "ஒரு நாள், நான் அவளை மிகவும் தேடினேன் (Miss பண்ணினேன்).

    அவள் கூட இருந்திருந்தால் என் நாள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றும் வகையில் அந்தத் தேடல் இருந்தது.

    அவள் எனக்கு எதிரே அமர்ந்திருந்தால், நான் உண்ணும் உணவு இன்னும் முழுமையாகவும், திருப்தியாகவும் இருந்திருக்கும் என்று தோன்றியது.

    அவள் என்னுடன் இருந்தால், என் உடற்பயிற்சிகள் ஒரு தண்டனையாகத் தெரியாமல் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

    நான் எங்கே இருந்தாலும், அந்த 'வீடு' போன்ற உணர்வையும், அமைதியையும் உணர அவள் எனக்குத் தேவைப்பட்டாள்.

    அதனால்,

    என் உயிர் நண்பியை... என் மனைவியாக்கிக் கொண்டேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.


    • பேட்ரியாட் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
    • பேட்ரியாட் படம் ஏப்ரல் 23 ஆம் த்தி வெளியாகவுள்ளது

    மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் பேட்ரியாட்.

    அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த படம் ஏப்ரல் 23 ஆம் த்தி வெளியாகவுள்ளது. இந்நிலையில், பேட்ரியாட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

    மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • ஆஷா என்பது உலகமே போற்றிய ஓர் உன்னதமான திட்டம் ஆகும்.
    • இது 2005ஆம் ஆண்டில் நான் அறிமுகப்படுத்திய திட்டம்

    'ஆஷா' திட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படத்திற்கு பாமக தலைவர் அன்புமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாம் படைத்த சாதனைகளை இந்த உலகம் கொண்டாடும் போது, அது சார்ந்த மலரும் நினைவுகளை மனதில் ஓட்டிப் பார்ப்பதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பணியாற்றிய போது இந்தியாவில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நான் அறிமுகப்படுத்திய ஆஷா(Accredited Social Health Activist - ASHA) திட்டத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் ஆஷா என்ற மராத்திய திரைப்படத்தை அமேசான் பிரைம் தளத்தில் பார்த்த போது எனக்கு அதே உணர்வு தான் ஏற்பட்டது.

    ஆஷா என்பது உலகமே போற்றிய ஓர் உன்னதமான திட்டம் ஆகும். இது 2005ஆம் ஆண்டில் நான் அறிமுகப்படுத்திய உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் பிரிக்க முடியாத அங்கம் தான் ஆஷாக்கள் ஆவர். இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் பயிற்சி பெற்ற சுகாதாரப் பெண் பணியாளர் ஒருவரையாவது நியமிக்க வேண்டும் என்பது தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் அடிப்படை விதி ஆகும். இந்த விதியை நிறைவேற்ற நியமிக்கப்பட்டவர்கள் தான் ஆஷாக்கள் ஆவர். இந்தியா முழுவதும் 10 லட்சம் ஆஷாக்கள் பணியாற்றி வருகின்றனர்.

    கருவுற்ற பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் ஐயங்களையும், அச்சத்தையும் போக்க வேண்டுமா? அவர்களுக்கு நுண்ணூட்டச் சத்து மற்றும் துப்புரவு தொடர்பான ஆலோசனைகளை வழங்க வேண்டுமா? கருவுற்ற பெண்களை குறித்த காலத்தில் மருத்துமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமா? பிறந்த குழந்தைகளின் உடல் நலத்தைக் காக்க வேண்டுமா? குறித்த காலத்தில் தடுப்பூசிகள் போடப்படுவதை உறுதி செய்ய வேண்டுமா? அனைத்தையும் ஆஷாக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

    அவர்களின் துடிப்பான பணிகளால் தான் இன்று 100% பிரசவங்களும் மருத்துமனைகளில் நடைபெறுகின்றன; தாய்மார்கள் இறப்பு விகிதம் 60 விழுக்காடும், குழந்தைகள் இறப்பு விகிதம் 80 விழுக்காடும் குறைந்துள்ளன. ஆஷா பணியாளர்களின் சேவையை பாராட்டி, அவர்களுக்கு உலக சுகாதார தலைவர்கள் விருதை உலக சுகாதார நிறுவனம் வழங்கிப் பாராட்டியிருக்கிறது.

    இவ்வளவு சிறப்பு மிக்க ஆஷா திட்டத்தை கதைக்களமாக வைத்து ஆஷா திரைப்படத்தை தயாரித்த அதன் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    டாக்சிக் படம் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    கீது மோகன்தாஸ் இயக்கத்தில், 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்சிக். 1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

    இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    இந்நிலையில், இந்த படத்தை தமிழ்நாட்டில் திங்க் ஸ்டுடியோ, எஸ் பிக்சர்ஸ், ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன. தமிழக விநியோக உரிமை கிட்டத்தட்ட ரூ.63 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    KGF 2 படத்தின் வெற்றியால் டாக்சிக் படத்திற்கு தமிழ்நாட்டில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளதால் இந்த அளவுக்கு அதிகமான தொகைக்கு இப்படத்தின் விநியோக உரிம விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு - ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற அச்சுறுத்தும் சம்பவங்களை மையமாகக் கொண்டது.
    • 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

    திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

    தடயம்

    நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் சமுத்திர கனி நடிப்பில் உருவாகி உள்ள தொடர் 'தடயம்'. இந்த தொடரில் நடிகை ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'தடயம்' தொடர் 1999-ம் ஆண்டில் தமிழ்நாடு - ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற அச்சுறுத்தும் சம்பவங்களை மையமாகக் கொண்டது. நிஜ வாழ்க்கையில் நடந்த பயங்கரமான தொடர் கொலைகளை மீண்டும் நினைவூட்டி பார்வையாளர்களுக்கு திகிலூட்டும் ஒரு புதிய அனுபவத்தை தர உள்ளது. இந்த நிலையில், 'தடயம்' தொடரை நாளை முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.

    ஹனி (Honey)

    தெலுங்குப்படமான 'ஹனி' (Honey) தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகிறது. சைக்கலாஜிக்கல் திரில்லிங்கான இப்படத்தில் நவீன் சந்திரா, திவ்யா பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மதனப்பள்ளியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

    HouseMaid

    ஃப்ரீடா மெக்ஃபேடனின் பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்ட திரில்லரான படம் 'தி ஹவுஸ்மெய்ட்'. பால் ஃபீக் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரபல நடிகைகளான சிட்னி ஸ்வீனி மற்றும் அமண்டா செஃப்ரிட் ஆகியோர் நடித்துள்ளார். ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு சேரும் இளம்பெண் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை முதல் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் கண்டு மகிழலாம்.

    இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

    • விபத்தில் கை, கால், முதுகு என அனைத்து இடங்களிலும் அடிபட்டது.
    • விருதை விட மக்களின் மனதில் இடம் பிடிப்பதுதான் முக்கியம்.

    சென்னையில் நடந்த அவள் ஐகான் விருது வழங்கும் விழாவில் நடிகை சினேகாவிற்கு கரு. பழனியப்பன் விருது வழங்கினார். விழாவில் பேசிய சினேகா, சினிமாவிற்கு வந்த புதிதில் 3 வருடத்திலேயே மிகப்பெரிய விபத்தில் சிக்கினேன். விபத்தில் கை, கால், முதுகு என அனைத்து இடங்களிலும் அடிபட்டது. நான் எழுந்து நடப்பதற்கே 8 மாதத்திற்கு மேல் ஆகும் என்றனர்.

    அந்த நேரத்தில் பார்த்திபன் கனவு கதையை கரு. பழனியப்பன் கூறினார். எந்த நம்பிக்கையில் என்னிடம் கதை சொல்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் அதெல்லாம் இன்னும் ஒரு மாதத்தில் நடந்து விடுவீர்கள் என சொன்னார். அவர் கொடுத்த நம்பிக்கையில் 1½ மாதத்தில் 'பார்த்திபன் கனவு' படப்பிடிப்பில் பங்கேற்றேன்.

    அந்த படத்தில் எல்லோருக்கும் விருது கிடைத்தது. எனக்கு விருது கிடைக்கவில்லையே என மிகவும் வருத்தப்பட்டேன். அந்த படத்திற்கு மட்டுமல்ல. ஆட்டோகிராப், பள்ளிக்கூடம் பட்டாசு என எந்த படத்திற்கும் எனக்கு விருது கிடைக்கவில்லை. ஆனால் போகப்போக அதுவே பழகி விட்டது. விருதை விட மக்களின் மனதில் இடம் பிடிப்பதுதான் முக்கியம் என்று பேசினார். 

    • பிரியங்கா சோப்ரா ரூ.18 லட்சம் மதிப்புள்ள சிவப்பு நிற சப்யாச்சி லெகங்காவை அணிந்திருந்தார்.
    • தீபிகா படுகோனே ரூ.12 லட்சம் மதிப்பில் லெகங்காவை திருமணத்திற்கு அணிந்திருந்தார்.

    விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் பிரபலங்கள் பலரது திருமண உடைகளின் விலை வெளியாகி இருக்கிறது.

    ஐஸ்வர்யா ராய்: திருமணத்தின் போது ஐஸ்வர்யாராய் காஞ்சிபுரம் புடவை அணிந்திருந்தார். அந்த பட்டு புடவை விலை ரூ.75 லட்சம்.

    சோனம்கபூர்: சோனம்கபூர் அணிந்த லெகங்கா விலை ரூ.70 லட்சம். இதை வடிவமைக்கவே 6 மாதங்கள் ஆனது.

    ஆலியாபட்: ஆலியாபட் அணிந்த ஆர்கன்சா புடவை மதிப்பு ரூ.50 லட்சம்.

    அனுஷ்கா சர்மா: அனுஷ்கா சர்மா ரூ.30 லட்சம் மதிப்புள்ள லைட் பிங்க் நிற சப்யாச்சி லெகங்காவை அணிந்திருந்தார்.

    பிரியங்கா சோப்ரா: பிரியங்கா சோப்ரா ரூ.18 லட்சம் மதிப்புள்ள சிவப்பு நிற சப்யாச்சி லெகங்காவை அணிந்திருந்தார்.

    தீபிகா படுகோனே: ரூ.12 லட்சம் மதிப்பில் லெகங்காவை திருமணத்திற்கு அணிந்திருந்தார்.

    கத்ரீனா கைப்: ரூ.17 லட்சம் மதிப்பிலான சிவப்பு நிற லெகங்காவை அணிந்திருந்தார்.

    கியாரா அத்வானி: பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்கோத்ரா வடிவமைத்த ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் கொண்ட இளஞ்சிவப்பு லெகங்கா அணிந்திருந்தார்.

    செல்வராகவன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இதுவாகும்.

    செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மெண்டல் மனதில்'. 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' படங்களுக்கு பிறகு செல்வராகவன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இதுவாகும். இருப்பினும் செல்வராகவனின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் முதல் படமாகும்.

    இந்த நிலையில், 'மெண்டல் மனதில்' படத்தின் முதல் பாடலான 'உயிரே உயிரே' வெளியாகியுள்ளது. இதுதொடர்பான புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    இதனிடையே, ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் உருவாகி உள்ள 'லக்கி தி சூப்பர் ஸ்டார்' படம் நேற்று முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இருந்து உதய்ப்பூர் புறப்பட்டு சென்றனர்.
    • திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நேற்றுமுன்தினம் முதல் தொடங்கி நடைபெற்றது.

    தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் இன்று காலை திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

    நடிகர் விஜய்தேவரகொண்டா -ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஆடம்பர ரிசார்ட்டில் நடைபெற்றது. இவர்களின் திருமணம் இன்று காலை 10.10 மணிக்கு பாரம்பரிய சடங்குகளின் படி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது.

    திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இருந்து உதய்ப்பூர் புறப்பட்டு சென்றனர். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நேற்றுமுன்தினம் முதல் தொடங்கி நடைபெற்றது.

    இருப்பினும் அதிகாரப்பூர்வ விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண புகைப்படங்களுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். 

    • இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    • இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    கடந்த 2009-ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான 'சிவா மனசுல சக்தி' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இக்கூட்டணி மீண்டும் இணையுமா? என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர்.

    இதனிடையே, ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். அப்படத்திற்கு 'ஜாலியா இருந்த ஒருத்தன்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Malik Streams Corporation தயாரிக்கும் இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி இப்படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

     

    இந்த நிலையில், 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தின் கதாநாயகியாக இவானா நடித்துள்ளார். இவானாவின் பிறந்தநாளை படக்குழுவினர் கொண்டாடிய நிலையில் புகைப்படத்தை பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது.



    • விசாரணை இன்னும் நடைபெறாத நிலையில் படம் நாளை வெளியாகுமா? என பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
    • வெளிநாட்டு விநியோக உரிமைகள் ஏற்கனவே விற்றுவிட்டதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.


    மத தீவிரமயமாக்கலை சித்தரிப்பது போன்று வெளியான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக 'தி கேரளா ஸ்டோரி 2' தயாரிக்கப்பட்டு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது.

    இந்த நிலையில் இந்த படத்தை தடை செய்ய கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த படத்தில் கேரளாவை வகுப்பு வாத கண்ணோட்டத்தில் காட்டுவதாகவும், இது சட்டம், ஒழுங்கை பாதிக்ககூடும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்னும் நடைபெறாத நிலையில் படம் நாளை வெளியாகுமா? என பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

    இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் நேற்று மூத்த வக்கீல் ஸ்ரீகுமார் ஆஜராகி, படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் என்றும், வெளிநாட்டு விநியோக உரிமைகள் ஏற்கனவே விற்றுவிட்டதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.

    இதனை கேட்ட நீதிபதி, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்பதாகவும், இந்த வாதங்கள் முடியும் வரை வெளியீட்டை ஒத்திவைக்கலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். அப்போது வக்கீல் ஸ்ரீகுமார் 2 நிமிட டீசரை மட்டும் வைத்து நிவாரணங்களை வழங்க முடியாது என்று வாதிட்டார்.

    படம் அனைத்து சட்டத் தேவைகளையும் பூர்த்தி செய்து உள்ளது என்றும், மத்திய திரைப்பட வாரியம் அதைச் சான்றளித்தவுடன், ஐகோர்ட்டு அதன் சொந்தக் கருத்தை மாற்ற முடியாது என்றும் அவர் வாதிட்டார். டீசர் வெளியான 16 நாட்களுக்குப் பிறகு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், மனுதாரர்கள் "கேரள மக்களின் கூட்டு கண்ணியத்தை" பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

    இருப்பினும் படத்திற்கு எதிரான நிலுவையில் உள்ள மனுக்கள் இறுதியாக விசாரிக்கப்பட்டு முடிவு செய்யும் வரை படத்தை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ×