search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மகிழ்ச்சி தரும் வழிகள்!
    X

    மகிழ்ச்சி தரும் வழிகள்!

    • கடந்த காலம் சில பாடங்களை நமக்கு கற்றுத் தரலாம்.
    • சிலருக்கு எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் இருக்கும்.

    கடுமையான கால கட்டத்தினை தாண்டுவது என்பது அனைவருக்கும் சவாலானது. அதே நேரத்தில் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் தெரியும். அப்போது விடா முயற்சி, ஆக்கப்பூர்வமான எண்ணங்களுடன். அவையே கதி என்று இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    அவை:

    * அனைத்து மகிழ்வற்ற சூழ்நிலைகளையும் மாற்றவும் முடியும். மாறவும் செய்யும்.

    * மன எண்ண ஓட்டங்கள் மற்றும் தவிப்பினை நீக்க சூழ்நிலையினை மாற்றுங்கள். நண்பர்களோடு வெளியில் செல்லலாம்.

    * அழகிய இயற்கை சூழலில் இருக்கலாம். நகைச்சுவை சினிமா பார்க்கலாம்.

    * ஏற்கனவே நீங்கள் தீயதினை வென்று விட்டீர்கள் என்பதால் நடப்பது ஒரு சிறு அனுபவம் அவ்வளவே.

    * பிறரது தவறான எண்ணங்கள், பேச்சுக்கள் இவற்றிற்கு நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? அதனை அவர்களிடமே திருப்பி கொடுத்து விடுங்கள். அவர்களே அதனை வைத்து கவலை படட்டும்.

    * நமக்கு மகிழ்ச்சி தேவை. நகைச்சுவை தேவை. * நம் மீது நாம் அன்பாக, கருணையாக இருக்க வேண்டும்.

    * எந்த சூழ்நிலையிலும் நாம் நன்றி சொல்ல ஏதோ ஒன்றினை பிரபஞ்சம் நமக்கு அளித்து கொண்டுதான் இருக்கின்றது.

    ஒரு நாளில் எந்நேரமும் மனதினில் ஏதோ ஒன்றினைப் பற்றி யோசிப்பதும் குழப்புவதுமாக இருப்பவரா நீங்கள்?

    * முதலில் உங்களுடன் நீங்கள் பேசும் முறையினை மாற்றிக் கொள்ளுங்கள்.

    * அதிகமாக உங்களுக்கு நீங்களே அழிவுப்பூர்வமான சிந்தனைகளை கொடுக்காதீர்கள்.

    * என்னால் முடியாது? என்றால் படிக்க முடியாது, திறமையாக பேச முடியாது என உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் உங்கள் மூளை அதனையே நிஜம் என பதிவாக்கி அதன்படியே செயல்படத் தொடங்கி விடும்.

    * கடந்த கால கசப்பான நினைவுகளில் மூழ்கி அதில் இருந்து வெளி வராமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கி, புழுங்கி தவிப்பவர்கள் ஏராளம். இதனால் நிகழ்காலம் என்ற உணர்வே இல்லாமல் போய் விடும்.

    * கடந்த காலத்தின் ஏதேனும் நிகழ்வுகளை நம்மால் மாற்ற முடியுமா? ஒரு நொடி முன்னால் நிகழ்ந்ததனைக் கூட திரும்ப பெற முடியாது.

    * கடந்த காலம் சில பாடங்களை நமக்கு கற்றுத் தரலாம். அந்த பாடங்கள் மூலம் இனி நாம் தவறு செய்யாத நிலையினை உருவாக்கலாம்.


    * ஒவ்வொரு நொடியும் நிகழ் காலத்தில் மட்டுமே இருப்பது எளிதானது. சிறந்த பலனை அளிக்க வல்லது.

    * நம்மை விடாது துரத்தும் சில எண்ண ஒட்டங்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியவில்லையா? உங்கள் எண்ணங்களை பொறுமையாய், முழுமையாய் ஒரு பேப்பரில் எழுதுங்கள். பின் அதனை கிழித்து எறிந்து விடுங்கள்.

    * அதிகம் யோசிப்பதற்கு பயம் ஒரு காரணம் என்பர். இப்படி நடந்து விடுமோ? அப்படி நடந்து விடுமோ? என்ற பயம் மனிதனை அரித்து விடுகின்றது. இதில் இருந்து விடுபடுவது எப்படி? பயத்தில் இருந்து விடுபட வேண்டும். சிலருக்கு பல்லி, கரப்பான் பூச்சி கூட பயம்தான். அதற்கு தீர்வு, வீட்டில் அவை இல்லாமல் செய்து விடுவதுதான். இது ஒரு சிறிய உதாரணம்தான். இதைப் போலத் தான் சிறிதோ, பெரிதோ பயத்தில் இருந்து வெளிவர முயற்சிகள் செய்து தீர்வு காண வேண்டும்.

    ஒன்றினை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். அதிகம் யோசித்துக் கொண்டு இருப்பவர்கள் பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் ஆவர். ஆகவே தீர்வுகளை பற்றி அளவாக, அமைதியாக யோசிக்கலாம், எழுதலாம்.

    * என்னால் நல்ல திறமைசாலியாக வாழ முடியும்'என்ற நம்பிக்கையினை மனதில் ஆழபதிய வைத்துக் கொள்ளலாம்.

    * சிலருக்கு எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் இருக்கும். இரவு தூங்காமல் இருந்து மறுநாள் இப்படி இருப்பது ஒரு சாதாரண நிகழ்வு எனலாம். ஆனால் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றுவது கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகின்றது.

    * சிலருக்கு எப்போதுமே சோர்வாக இருக்கக் கூடும். இது பெண்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கும். * கவனம் செலுத்த முடியாமை * தலை சுற்றுதல்

    * உடம்பு வலி * மூட்டு வலி * தலை வலி * தொண்டை கட்டு போன்ற காரணங்களால் அதிக சோர்வு, தூக்கம் ஏற்படலாம்.

    தைராய்டு குறைபாடு:

    * தசைகள் வலுவின்மை * சோர்வு *ஜில்லென இருப்பது * மூட்டுகள், தசைகளில் வலி * இருதய துடிப்பு சற்று வேகம் குறைந்து இருப்பது. * வியர்வை குறைவு * மலச்சிக்கல் * மனச்சோர்வு * வறண்ட சருமம் * முகம் வீங்கி இருத்தல் * கரகரப்பான குரல் * மாதவிடாய் காலத்தில் அதிக உதிர போக்கு போன்ற காரணங்கள் தைராய்டு குறைபாட்டால் இருக்கும். இதன் காரணமாகவும் எப்பொழுதும் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கலாம்.

    ரத்த சோகை: உடலில் சுறுசுறுப்பின்றி இருப்பர். சக்தி இராது எப்பொதும் படுத்துக்கொண்டே இருப்பார்கள். வெளிறிய சருமம். முறையற்ற இருதய துடிப்பு போன்றவை இருக்கும்.

    தசை நார்வலி: சிலர் உடல் முழுவதும் வலி என்பர். சோர்வால் இரவில் தூக்கமின்மை இருக்கும். இதனால் மனச்சோர்வு, படபடப்பு, தலைவலி, உடல் இறுக்கம் என இருக்கும்.

    அலர்ஜி: இருமல், தும்மல், மூக்கில் நீர் வடிதல் ஆகிய அறிகுறிகள் இருக்கும். கண்களில் அரிப்பு இருக்கலாம்.

    புளு போன்ற வைரஸ் பாதிப்புகள்: இத்தகு பாதிப்பு நேரங்களில் அதிக தூக்கம் தேவைப்படும். ஆர்த்ரைடிஸ், நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற நோய்களின் பாதிப்புகள் காரணமாக இருக்கலாம்.

    உணவில் சத்து மற்றும் வைட்டமின்கள் குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    உடலில் நீர் சத்து குறைவாக இருப்பது: அதிக தாகம், சிறுநீர் அளவு குறைதல். அடர்ந்த சிறுநீர், வறண்ட சருமம், தலை சுற்றல். இவை அறிகுறிகளாக தெரியும். உடலில் நீர் சத்து குறைவது சற்று ஆபத்தானதே.

    மன அழுத்தம்: போதிய அளவு ஆக்சிஜன் இல்லாமல் மூச்சு வாங்கும். வயிறு பிரச்சனை, பசியின்மை இருக்கும். ஊட்டச் சத்து சரிவர உறிஞ்சப்படாது இருக்கலாம். படபடப்பு ஏற்படும்.

    மனச்சோர்வு, கவலை இவையும் இத்தகு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

    மாதவிடாய் காலங்களில் வயிற்று பிரட்டல், தலைவலி, முதுகு வலி, எரிச்சல் காரணமாக சிலர் படுத்துக் கொண்டே இருப்பர்.

    கர்ப்ப காலத்தில் ரத்த சோகை, ஹார் மோன் மாறுபாடுகள் இதே பிரச்சனையைத் தரும்.

    சரி இதையெல்லாம் திடீரென இப்பொழுது எழுத என்ன காரணம்?

    கோடை வந்து விட்டது. அதிக வெப்பம் நம்மை பல விதங்களில் வாட்டும். ஆனால் பல உடல் நல பிரச்சனைகளை நாம் கோடை பிரச்சனை என்று எண்ணி கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது. கோடைக்கான கவனமும் தேவை:

    அன்றாடம் இருமுறை குளியுங்கள்.

    2½ லிட்டர் நீர் அருந்துங்கள்.

    காபி, டீ, இவற்றினை காலை ஒரு வேளையோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

    பழைய சாதம், நீராகாரம் இவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள்! நீர் மோர் நிறைய குடியுங்கள்!

    காரம், புளி இவற்றினை வெகுவாய் குறைத்து விடுங்கள்! கொளுத்தும் வெயிலில் வெளியில் செல்வதனை தவிர்த்து விடுங்கள்!

    வெயிலோ, மழையோ கண்டிப்பாய் பத்து நிமிடமாவது தவறாமல் தியானம் செய்யுங்கள்!

    Next Story
    ×