search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பார்சிலோனா ஓபன் டென்னிஸ் - அரையிறுதிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்
    X

    பார்சிலோனா ஓபன் டென்னிஸ் - அரையிறுதிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

    • முதல் காலிறுதியில் சிட்சிபாஸ் ஆஸ்திரேலிய வீரரை வென்றார்.
    • நாளை நடைபெறும் அரையிறுதியில் இத்தாலி வீரரை எதிர்கொள்கிறார்.

    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெற இருந்த இரண்டாவது காலிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் காயம் காரணமாக விலகியதால், சக நாட்டு வீரர் லாரன்சோ முசெட்டி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இதனால் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியை சிட்சிபாஸ் மோதுகிறார்.

    Next Story
    ×