search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    துபாய் சாம்பியன்ஷிப்: சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த குரோசிய வீராங்கனை
    X

    துபாய் சாம்பியன்ஷிப்: சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த குரோசிய வீராங்கனை

    • துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • நேற்று நடந்த போட்டியில் சபலென்காவை குரோஷிய வீராங்கனை வீழ்த்தினார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெலாரஸின் அரினா சபலெங்கா, 31-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக்குடன் மோதினார்.

    பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் வெகிக் 6-7 (5-7), 6-3, 6-0 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    அரினா சபலென்கா ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×