என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
13 ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்ட புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்
Byமாலை மலர்6 Sep 2021 10:18 AM GMT (Updated: 6 Sep 2021 10:18 AM GMT)
நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அந்நிறுவன வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வந்துள்ளது.
மின்னணு அக்சஸரீக்கள் பிராண்டான நாய்ஸ், இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ்பிட் கோர் என அழைக்கப்படுகிறது. இதில் 1.28 இன்ச் டிஸ்ப்ளே, சின்க் அலாய் பாடி, 24x7 இதய துடிப்பு சென்சார், 13 ஸ்போர்ட் மோட் போன்ற அம்சங்கள் உள்ளன.
நாய்ஸ்பிட் கோர் மாடல் சின்க் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி, இதய துடிப்பு, உறக்கம் உள்ளிட்டவைகளை டிராக் செய்கிறது.
இதில் உள்ள 285 எம்.ஏ.ஹெச். பேட்டரி 7 நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது. ஸ்டாண்ட்பை மோடில் இந்த வாட்ச் 30 நாட்களுக்கான பேக்கப் வழங்கும். நாய்ஸ்பிட் செயலி மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைந்துகொள்ளும் வசதியை இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டிருக்கிறது.
நாய்ஸ்பிட் கோர் ஸ்மார்ட்வாட்ச்- சார்கோல் பிளாக் மற்றும் சில்வர் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2,999 எனும் துவக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X