என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பை வெளியிடும் எல்ஜி?
Byமாலை மலர்3 April 2021 8:06 AM GMT (Updated: 3 April 2021 8:06 AM GMT)
எல்ஜி நிறுவனம் மொபைல் போன் சந்தையில் நீடிப்பது குறித்த முக்கிய முடிவை அடுத்த வாரம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எல்ஜி நிறுவனம் மொபைல் போன் வியாபாரத்தை விரைவில் நிறுத்தலாம் என கூறும் தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், இது குறித்து எல்ஜி சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் என்ஜி நிறுவனம் மொபைல் போன் சந்தையில் இருந்து விலகுவது குறித்த அறிவிப்பை அடுத்த வார துவக்கத்தில் வெளியிடலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பு ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மொபைல் போன் சந்தையில் கடந்த சில காலாண்டுகளாக எல்ஜி நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனையொட்டி எல்ஜி விரைவில் மொபைல்போன் சந்தையில் இருந்து வெளியேற இருப்பதாக பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தன.
மொபைல் போன் வியாபாரத்தை நிறுத்துவது குறித்த அறிவிப்பை தொடர்ந்து அதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்ற வியாபார பிரிவுகளுக்கு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X