என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் புது நோக்கியா போன்
Byமாலை மலர்1 Dec 2020 4:11 AM GMT (Updated: 1 Dec 2020 4:11 AM GMT)
பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்ட புது நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் முந்தைய மாடலை விட வேகமான பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6.4 இன்ச் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிமுகமான நோக்கியா 5.3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். நோக்கியா 5.3 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் புதிய மாடலில் மேம்பட்ட பிராசஸர் வழங்கப்படலாம்.
புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் புளூ மற்றும் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20 ஆயிரம் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X