என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
விரைவில் இந்தியா வரும் ஒப்போ ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்20 Aug 2020 12:32 PM GMT
ஒப்போ நிறுவனத்தின் புதிய எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஒப்போ எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான டீசரையும் வெளியிட்டு உள்ளது.
புதிய எஃப்17 ப்ரோ டீசரின் படி இந்த ஸ்மார்ட்போன் 7.48 எம்எம் தடிமனகாவும், இதன் எடை 164 கிராம் என தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் மிகவும் மெல்லிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என ஒப்போ தெரிவித்து இருக்கிறது.
மேலும் டீசரின் படி இந்த ஸ்மார்ட்போனில் வால்யூம் ராக்கர் பட்டன்கள், சிம் டிரே உள்ளிட்டவை இடது புறத்திலும், ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமரா பம்ப் வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ எஃப்17 ப்ரோ வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
முன்னதாக ஒப்போ நிறுவனம் எஃப்15 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் புதிய பிளேசிங் புளூ நிறத்தில் கிடைக்கிறது. தற்சமயம் எஃப்15 வெளியாகி ஆறு மாதங்களுக்கு பின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு நடைபெற இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X